திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
2/5
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
3/5
இதற்காக, திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திருப்பதி லட்டு பிரசாதத்தை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தயாரித்து வருகின்றனர். தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Advertisment
4/5
கூடுதல் லட்டு வேண்டும் என்பவர்கள் லட்டு கவுன்டரில் நேரில் சென்று, ஒரு லட்டுக்கு தலா ரூ.50 செலுத்தி லட்டுககளை பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறையே தற்போது வரை வழக்கத்தில் இருந்து வருகிறது. எனினும், இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
5/5
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக லட்டு ஒன்று ரூ.50-க்கு வழங்கப்படும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.