/indian-express-tamil/media/member_avatars/2025/03/15/2025-03-15t100634324z-sundar.jpg )
/indian-express-tamil/media/media_files/2025/05/13/12vgqNmXXqTkOhEyHfSL.jpg)
இந்த சம்மருக்கு கூட்டமே இல்லாத சூப்பரான சுற்றுலா தலங்கள்!
கோடை விடுமுறைக்கு மக்கள் கூட்டம்கூட்டமாக படையெடுக்கும் இடம் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு போன்ற இடங்கள்தான்.ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் இந்த இடங்களுக்குச் செல்வதால் கூட்ட நெரிசலும் அதிகமாக காணப்படும். அழகிய இடங்களை சுற்றிப்பார்க்கவும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். எனவே, மக்கள் அதிகளவு செல்லாத அழகிய இடங்கள் ஏராளமாக உள்ளன. அதனை தற்போது பார்க்கலாம். அதிகமான மக்கள் கூட்டம் இல்லாத அமைதியான சுற்றுலாவை விரும்புபவர்கள், இயற்கை அனுபவங்களை ரசிப்பவர்கள் இந்த மலை நகரங்களுக்குச் சென்று தங்களின் சம்மர் வெகேஷனை அனுபவிக்கலாம். அந்த வகையில், இந்தப் பதிவில் தமிழ்நாட்டில் பேமஸ் ஆகாத அதேபோல் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத குளிர்ச்சியான சுற்றலா இடங்களை பற்றி பார்க்கலாம்
திண்டுக்கல் - பூம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூம்பாறை. மேலும், இந்த இடம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு காட்சியளிக்கும். கொடைக்கானலுக்கு வருபவர்கள் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் இந்த பூம்பாறையை தேர்வு செய்யலாம்.
இந்த கிராமத்துக்கு செல்லும் வழி எங்கும் படம் எடுத்து ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் லேப்டாப்பில் ஸ்கிரீன் சேவர்களாக வைக்கும் அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சம் பிளாக்குகள் தான். ஆக செல்ஃபி வெறியர்கள் மற்றும் போட்டோ ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தளம் எனலாம். இங்கு வெறுமனே கேம்பிங் செய்யாமல், சொகுசாக சகல வசதிகளோடு கேம்பிங் செய்ய லக்ஸிகிளாம்ப் (Luxeglamp) என பூம்பாறையிலேயே ஓர் அருமையான இடம் உள்ளது. பிரமாதமான வியூ உடன் ஒய்யாரமாகத் தங்கலாம். சீசன் என்றால் உங்கள் அறையில் இருந்து நீர் வீழ்ச்சியைக் கூட காண வாய்ப்பு இருக்கிறது. அது போக, ஹோட்டல்களால், பாரதி நகர் வில்பட்டியில் சுவிட்சர்லாந்தின் மலைத் தொடர்களில் காணப்படும் மரத்தாலான சிறிய கேபின் அறைகளைப் போலவே கொடைக்கானலில் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மன்னவனூரும் கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ. தொலைவில் பூம்பாறைக்கு அடுத்து அமைந்துள்ளது.
இங்கு சுற்றிப்பார்க்க மிகவும் அழகான மற்றும் அமைதியான மன்னவனூர் ஏரி, வியூபாயின், நீர்வீழ்ச்சி என கண்களை கவரும் அளவிற்கு இருக்கும். கொடைக்கானலில் அமைத்துள்ள மிகவும் அழகான மலைக்கிராமம் ஆகும். இந்த இடமும் பூம்பாறை, மன்னவனூர் ஆகிய ஊர்களுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கூக்கால் நீர்வீழ்ச்சி, திரில்லிங்கான வியூப் பாயிண்டுகள், அமைதியான ஏரி போன்ற பலவகையான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளது
கோவை - வால்பாறை:
தமிழ்நாட்டில் கோவைதான் இனிமையான வானிலை மற்றும் இயற்கையின் நெருக்கம் ஆகியவற்றிற்கு பெயர்பெற்றது. கோவையில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது வால்பாறை. ஆனைமலை மலைகளில் பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள், அழகிய வனப்பகுதிகள், அழியானு அணை, சுற்றுலா படகு சவாரி போன்றவை உள்ளது. இதுமட்டுமல்ல வன விலங்குகளை எளிதாகவும் பார்க்க முடியும்.
வால்பாறை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 அடி (சுமார் 1,067 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு நிலவும் இதமான காலநிலை ஆண்டு முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வருகை தர ஏதுவாகவுள்ளது.அடர்ந்த பசுமையான வனப் பகுதிகள், ஆபத்தான வளைவுகளுடன் கூடிய வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகள் (40 கொண்டை ஊசி வளைவுகள் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் உள்ளன. கண்ணுக்கு விருந்தளிக்கும் பரந்து விரிந்த தேயிலை, காபி தோட்டங்கள் என எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்திய காட்சி நம்மை மெய்மறக்கச் செய்கிறது.
ஊட்டி - கேர்ன்ஹில்:
ஊட்டியில் பார்க்க தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி ஏரி, மான் பூங்கா, கல்ஹட்டி நீர்வீழ்ச்சிகள், முதுமலை தேசிய பூங்கா என பல இடங்கள் இருந்தாலும், இந்த வழக்கமான இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக ’கேர்ன்ஹில்’ உள்ளது. ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருப்பது குறித்து பலருக்கு தெரியவில்லை.
ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கேர்ன்ஹில். கேர்ன்ஹிலை இயற்கையின் செல்ல தொட்டி என்றழைக்கின்றனர். இருபுறங்களிலும் அடந்த மரங்களுடன் காட்சியளிக்கும், இந்த இடம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. வனப்பகுதிக்குள் சென்றதும் ஒரு குறுகிய சாலை காணப்படும். அதன் சிறிது தூரத்தில் ஒரு டிக்கெட் கவுண்டர் இருக்கும். அங்கு டிட்கெட் எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் செல்லலாம். பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மலையேற்றம் செய்பவர்களுக்கு ரூ.350 வசூலிக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இந்த வனப்பகுதி நீலகிரி கோட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைப்பயணமாகச் சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சிக் கோபுரத்திலிருந்து இயற்கை காட்சிகளைப் பார்வையிடலாம். கூடுதல் சிறப்பாக அந்த பெரிய பெரிய மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஏறி நடந்துசென்று மறக்கமுடியாத அனுபவத்தை பெறலாம்.
/indian-express-tamil/media/post_attachments/img/pages/large-desktop/sirumalai-1657012957_fedf8ff9a41be972a03f-907065.webp)
கோவை - டாப்ஸ்லிப் அழகிய வனப்பகுதி:
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள டாப்ஸ்லிப், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் அமைந்துள்ளது. டாப்ஸ்லிப் கண்காணிப்பு கோபுரம், சுற்றியுள்ள காடுகளின் அற்புதமான காட்சிகளைக் கொண்டுள்ளது. இங்கு மற்ற சுற்றுலா இடங்கள் மாதிரி அதிக கூட்டங்கள் இருக்காது. அதேபோல் அதிக இயற்க்கை காட்சிகள் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும்.
வங்காளப்புலிகள், யானைகள், காட்டெருமைகள் எளிதாக பார்க்கலாம். கடல் மட்டத்தில் இருந்து 800 அடிக்கு மேல் ஆனைமலை தொடரில் ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் டாப்சிலிப் அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 26 கி.மீ. தரை வழியாக பயணித்து அங்கிருந்து மலைப் பகுதியில் 10 கி.மீ. பயணித்தால் டாப்ஸிலிப்பை சென்று சேரலாம். வரும் வழியில் ஆழியார் நீர்த்தேக்கமும் மூங்கில் தேக்கு மரங்களும் சுற்றுலா வாசிகளை வரவேற்கும்.
நீலகிரி - மசினகுடி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லக்கூடிய நெடுஜாலியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் மசினகுடி அமைந்துள்ளது.
பொதுவாக நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் போன்ற பிரபலமான இடங்களுக்குத் தான் செல்வார்கள். இந்த மசினகுடி இருப்பது பலருக்குத் தெரியாது. இதன் காரணமாக இந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதில்லை.
கோவை - சிறுவாணி நீர்வீழ்ச்சி மற்றும் அணை:
கோயம்புத்தூரில் இருந்து மேற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளது சிறுவாணி, அடர்ந்த காடுகள் மற்றும் பாறை நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது.
இந்த இடத்தை சுற்றியுள்ள மிகவும் அழகிய இடங்களில் இயற்கை விருபிகளை ஈர்க்கும், சிறுவாணி நதியில் நீர் பாய்ந்தோடும் அழகு ரம்மியமானது. மழைக்காலங்களில், அதிக அளவு தண்ணீர் கொட்டும், இது ஒரு அற்புதமான காட்சியாக நிரூபிக்கிறது. காடு வழியாக மலையேற்றம் செய்யும் போது முழு நீர்வீழ்ச்சியையும் சிறப்பாகக் காணலாம்,
நெல்லை - மாஞ்சோலை:மாஞ்சோலை நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் மிகுந்த சுற்றுலா இடம் ஆகும். இங்கு தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.
இதுவும் ஒரு வனப்பகுதியாக. மாஞ்சோலைக்கு நாம் நமது சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்றால் நாம் முன்கூட்டிய அதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இங்கேயும் நீர்வீழ்ச்சிகள், ஏரி, டேம் போன்றவை நிறைந்த இடமாக இருக்கும். இதுபோன்ற மிகவும் அழகான மற்றும் கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு மலைபிரதேசத்தை பற்றி தெரிந்து கொண்டு பிறகு உங்கள் டூரை திட்டமிடுங்கள்.!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.