நீரஜ் சோப்ராவுடன் திருமணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மனு பாக்கர் தந்தை!
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மனு பாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம்? விளக்கம் கொடுத்த மனு பாக்கர் தந்தை
1/5
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கங்கள் (2020 டோக்கியோவில் தங்கம், 2024 பாரிஸில் வெள்ளி) வென்ற முதல் இந்தியர் ஆனார்.
2/5
பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மனு பாக்கர். 3-வது இடம் பிடித்த அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போல் கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.
3/5
நீரஜ் சோப்ரா - மனு பாக்கர் ஆகிய இருவரும் பாரிஸில் பொதுவெளியில் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் மட்டுமே அவர்கள் இருவரும் பேசிய நிலையில், சமூக வலைதளங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வதந்திகள் பரவியது.
Advertisment
4/5
மனு பாக்கரின் தாய் சுமேதா, நீரஜ் சோப்ராவுடன் பேசிய வீடியோவில், அவர் தனது தலையில் நீரஜ் சோப்ராவின் கைகளை வைத்து ஆசிர்வாதம் வாங்குவது போன்று செய்தார். மேலும் நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோக்களை வைத்து நீரஜ் சோப்ரா - மனு பாக்கர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியது.
5/5
"மனு இன்னும் மிகவும் இளமையாக இருக்கிறார். அவருக்கு திருமண வயது கூட ஆகவில்லை. மனுவின் தாய் நீரஜ் சோப்ராவை தனது மகனாகவே கருதுகிறார்" என்று மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் மனு பாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.