New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/24/istockphoto-810937516-612x612-1-2025-07-24-13-29-02.jpg)
2025ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ உள்ளன. 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என இந்த ஆண்டு கிரகண நிகழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வந்து சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் போது, அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவான வானியல் நிகழ்வு, ஆனால் மத மற்றும் ஜோதிடக் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஹோலி பண்டிகை அன்று அதாவது மார்ச் 14 ஆம் தேதி நிகழ்ந்தது.
இந்த நிலையில் கடைசி சூரிய கிரகணும், 2வது சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 21 என்பது அஷ்ட மாத கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை தேதி.
இது சர்வ பித்ரு அமாவாசை அல்லது மகாளய அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. இது பித்ரு பக்ஷத்தின் கடைசி நாள், அப்போது முன்னோர்களின் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.
ஜோதிடத்தின்படி, சர்வ பித்ரு அமாவாசை நாளில் சூரிய கிரகணம் மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ஜபம், தவம் மற்றும் தானம் செய்வது முன்னோர்களின் ஆசிகளைத் தருவதோடு, ஜாதகத்தின் தோஷங்களையும் நீக்குகிறது.
பித்ரு பக்ஷத்தின் கடைசி நாள் 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும், மேலும் இந்த கிரகணம் புதனின் ராசியான கன்னி மற்றும் உத்தர பால்குனி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது.
சர்வ பித்ரு அமாவாசை நாளில் ஏற்படும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்தியாவில் கிரகணம் தெரியாதபோது, இந்த சூதக் காலம் பொருந்தாது.
செப்டம்பர் 21 அன்று நிகழும் சூரிய கிரகணம் ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும், அதாவது சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்க முடியும்.
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்றாலும், அதன் சில மறைமுக விளைவுகளை காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.