வீட்டில் நேர்மறையான ஆற்றல் மற்றும் சூழல் நிலவ வேண்டும் என்ற நம்பிக்கையில் சாம்பிராணி பயன்படுத்துவார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், அஷ்டமி, நவமி ஆகியவற்றின் போது சாம்பிராணி போடலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், முடிந்தால் தினசரி சாம்பிராணி போடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பூஜை பொருள்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சாம்பிராணி. அதனடிப்படையில், நமது வீட்டிலேயே சாம்பிராணி எவ்வாறு செய்யலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.