செரிமானக் கோளாறு உள்ளவர்கள், தினமும் பப்பாளி சாப்பிடுவது அவசியம். பப்பாளியின் குணப்படுத்தும் சக்தி செரிமான அமைப்பில் உள்ள அழுத்தத்தை நீக்கி, உணவை வேகமாக வளர்சிதை மாற்ற உதவுகிறது. பப்பாளியில் பப்பைன் என்ற நொதி இருப்பதால், இது உணவை விரைவாக உடைக்க உதவுகிறது. மேலும், பப்பாளி அதிக நீர்ச்சத்து கொண்ட பழமாகும், இது மலச்சிக்கல் அபாயத்தைத் தடுக்கிறது, ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. பப்பாளியில் உள்ள மற்றொரு நொதி- சைமோபாபைன்- வீக்கத்தை குணப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அஜீரணம், வீக்கம் , மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது .