/indian-express-tamil/media/media_files/2025/06/04/CPbFy9JvLxHGPckrDgOy.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-171754-586654.png)
திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி. அருகில் உள்ளது பத்தமடை எனும் ஊர். இங்குள்ள முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த பாய் முடைதல் தொழிலைச் செய்து வருகின்றனர். சுமார் 150 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-171719-858231.png)
தாமிரபரணி நதிக் கரையில் உள்ள கோரைப் புற்கள் மற்றும் கத்தாழையைக் கொண்டு இந்தப் பாய் தயார் செய்யப்படுகிறது. எனவே, இந்தப் பாயில் படுத்துறங்க உடலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-171714-793592.png)
அக்காலத்தில் இப்பகுதி மக்கள் இந்தப் பாய் முடையப் பயன்படும் கோரைப் புற்கள் மற்றும் பாய்களை நனைய வைக்க தாமிரபரணி ஆற்றைப் பயன்படுத்தி வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-171802-347360.png)
தற்போது அவர்களின் இருப்பிடங்களில் பெரிய அளவில் தொட்டி கட்டி, அதில் நீர் நிரப்பி பாய்களை நனைய வைக்கின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-171728-515128.png)
திருமணத்தின்போது மணமகன், மணமகள், தேதி, ஊர் பெயரை சேர்த்து இந்தப் பாயை இவர்கள் நெய்து கொடுக்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-171749-291384.png)
இங்கு தயார் செய்யப்படும் பாய்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இங்கு சாதாரண பாய் முதல் உயர் ரக பாய்வரை தயாரிக்கப்படுகிறது. இந்த பாய்கள் இயற்கையாக விளையும் புற்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-172621-533011.png)
பத்தமடை பாய் புவிசார் குறியீடு பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும். வழக்கமான நெசவு மற்றும் வடிவங்களைத் தவிர பத்தமடை பாய் திருமண விழாக்களுக்கு செய்யப்படுகிறது. மணமகன், மணமகள் பெயர்களும் திருமண தேதியும் பாயில் பின்னப்பட்டு தயார் செய்யப்படுகிறது. இந்த பாய்க்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-172610-103041.png)
பாய் தயாரிப்பதற்கான வழிமுறை: புல்லை உலர்த்துதல், ஊறவைத்தல், பிரித்தல், சாயம் இடுதல் போன்ற நீண்ட செயல்முறைகள் கொண்டது. தேவையை பூர்த்தி செய்வதற்காக மின்சக்தியில் இயங்கும் தறிகள் உள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/screenshot-2025-06-04-172548-381562.png)
என்னதான் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கினாலும் பாயில் படுத்த சுகம் வராது.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/CPbFy9JvLxHGPckrDgOy.jpg)
அப்படி இருக்க பாய் தொழிலை செய்து வரும் நெசவாளர்களுக்கு உதவ வேண்டுமானால் அதிக அளவில் அவர்கள் தயார் செய்யும் பாய்களை வாங்கினாலே போதுமானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.