வெயில் காலங்களில் , வீட்டு மொட்டை மாடியில் வெயில் கொதித்து அதன் சூடானது அந்த மொட்டை மாடித்தரை வழியே கீழிறங்கும். மதிய நேரத்தில் அந்தத் தரையில் ஒரு நொடி கூட நிற்க முடியாத அளவிற்கு சூடேறி இருக்கும். பகல் முழுவதும் அனலாக இருக்கும் மாடித் தரையானது, மாலையில் குளிர்ந்திருக்கும். ஆனால் அந்தச் சூடு மெதுவாகக் காங்கிரீட்டினுள்ளே புகுந்து, வீட்டினுள்ளே சீலிங் அதிக சூடாக இருக்கும். இதனால்தான் இரவில் மின்விசிறியைப் போட்டதும் சூடான காற்று உள்ளே இறங்கிவிடுகிறது.
2/7
ஆனால் ஒரே ஒரு பெட்ஷீட் போதும், உங்கள் அறைக்குள் ஏசி ஓடும் உணர்வை ஏற்படுத்திவிடலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?
3/7
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். இல்லையெனில் ஒரு 4,5 வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வைக்கவும். இதை ஒரு தட்டின் மேல் படுக்கையறையில் வைக்கவும். இப்படி செய்வதால் ஐஸ் உருகும் போது அறை குளுமையாக இருக்கும். இதை டேபிள் பேன் அருகில் வைக்கும் போது இன்னும் நன்றாக இருக்கும்.
Advertisment
4/7
அதேபோல ஒரு பக்கெட் தண்ணீரில் சில ஐஸ்கட்டிகளை சேர்த்து, உங்கள் அறையை துடைக்கும் போது வீடு இன்னும் குளுமையாக இருக்கும். வெயில் காலங்களில் பகல் நேரங்களில் வீடு துடைப்பதற்கு பதிலாக இரவு தூங்கும்முன் துடைத்தால், டைல்ஸ் நல்ல ஜில்லென்று இருக்கும்.
5/7
வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் அவசியம். எனவே ஜன்னல்கள் எதிரெதிர் திசைகளில் இருந்தால், காற்று எளிதாக உள்ளே வந்து வெளியேறும். காலையில் 5 முதல் 8 மணி வரையிலும், மாலையில் 7 முதல் 10 மணி வரையிலும் ஜன்னல்களை திறந்து வைத்தால், குளிர்ந்த காற்று வீட்டுக்குள் நுழைந்து அறை வெப்பநிலையைக் குறைக்கும். அதேபோல ஒரு பக்கெட் தண்ணீரில் 2 சொட்டு கம்ஃபர்ட் சேர்த்து காட்டன் பெட்ஷீட்டை அதில் முக்கி நன்கு பிழிந்து ஜன்னல் பக்கத்தில் ஸ்கிரீனுக்கு பதிலாக போடவும்.
6/7
அதேபோல வீட்டு கதவு, ஜன்னல்களை ஒட்டி மூங்கில் பாய்களைத் தொங்கவிட்டால், அவை வெப்பத்தை வெளியிலேயே நிறுத்திவிடும். ஜன்னலோரங்களில் செடிகள் வளர்த்து கொடிகளைப் பரவ விடுவதால், வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், காற்றில் உள்ள வெப்பத்தை உறிந்துகொண்டு, குளிர்ச்சியான காற்றை வீட்டுக்குள் அனுப்பும். வீட்டை சுற்றியுள்ள காற்றும் குளுமையடையும்.
Advertisment
Advertisements
7/7
வீட்டின் கூரை வழியாக வெப்பம் இறங்குவதைத் தடுக்க, தளத்தின் மேற்பரப்புகளிலும், மேற்கூரைகளிலும், ஒயிட்வாஷ் செய்யலாம். வெண்மை நிறம் ஒளியை பெருமளவு பிரதிபலித்துவிடும் என்பதால் வெப்பம் வீட்டுக்குள் இறங்காது. ஆனால் இது நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது என்பதால் அடித்த ஆண்டு மீண்டும் ஒயிட்வாஷ் செய்ய வேண்டி இருக்கும்.