/indian-express-tamil/media/media_files/2025/06/17/f4jIea4W4csnqp1jTboK.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/13/KC2dCcMBZmAyLSxXgm39.jpg)
மழைக்காலங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் மழைக்காலங்களில் ஷூ அணியும் போதும் வண்டியில் செல்லும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். நீங்கள் இதுபோன்ற சூழலுக்கு செல்ல வேண்டாம என நினைக்கிறீர்களா?
/indian-express-tamil/media/media_files/2025/06/13/swOi0VfCKoPCpSQ8UpTU.jpg)
மழைக்காலத்தில் பாம்புகள் வறண்ட மற்றும் பாதுகாப்பான இடங்களைத் தேடி வீடு, முற்றம், தோட்டம் போன்ற இடங்களில் நுழைகின்றன. இதைத் தடுக்க, வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; புதர்கள், உலர்ந்த இலைகள், மரத் துண்டுகள், குப்பைகள் போன்றவை குவியாதவாறு கவனிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/13/8pyGziGQu1F7PWoqECRH.jpg)
வீட்டிற்குள் அல்லது வெளியே ஒரு தோட்டம் இருந்தால், புல்லை தொடர்ந்து வெட்டவும். இது பாம்புகள் ஒளிந்து கொள்ள இடம் தேடுவதைத் தடுக்கும். எலிகள் பாம்புகளின் உணவாக இருப்பதால், வீட்டின் உள்ளே அல்லது வெளியே எலிகள் இருந்தால் பாம்புகளை ஈர்க்கும் வாய்ப்பு அதிகம். எனவே, எலிகளைத் தடுப்பது பாம்புகள் நுழையாமலிருக்க உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/ya9WQdAD2JG9V0HEXczq.jpg)
நீங்கள் தரைதளமோ அல்லது முதல் மாடியிலோ வசிக்கிறவராக இருந்தால், மழைக்காலங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வைக்க வேண்டாம். இது பாம்புகள், கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் உள்ளே நுழைவதைத் தடுக்க உதவும். மேலும், ஜன்னல்கள், கதவுகள் மற்றும் காற்றோட்ட குழாய்களில் நன்றாக வலை பொருத்துவது பாதுகாப்புக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/fLeij7AZeMQp3ZHrKfMu.jpg)
பாகற்காய் இலைகளை அரைத்து தண்ணீரில் கலக்கலாம் அல்லது பூண்டு சாற்றை தண்ணீரில் கலந்து கரைசலைத் தயாரிக்கலாம். அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு வீட்டைச் சுற்றி தெளிக்கலாம். இது பாம்புகளைத் தடுக்கும். உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலில் வேப்ப எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயைத் தெளிக்கலாம். சுவரின் ஓரங்களிலும், வடிகால்களிலும் ஊற்றுவதும் நல்லது.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/hO13uKChNJ39hZtDyEA7.jpg)
வீட்டில் தோட்டம் மற்றும் தொட்டியில் செடிகள் இருந்தால், இரவில் அந்த இடம் இருட்டாக இருக்காமல் வெளிச்சம் இருக்குமாறு ஒளி விளக்குகள் அமைக்க வேண்டும், ஏனெனில் பாம்புகள் இருண்ட இடங்களை விரும்புகின்றன. இதனால் வெளிச்சம் வைத்தால் பாம்புகள் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/3kB9Do0rqBExs97C0kH3.jpg)
பூனைகள், கோழிகள், சில இன நாய்கள் பாம்புகளை வீட்டில் தங்க அனுமதிப்பதில்லை, மேலும் அவற்றின் வாசனையும் பாம்புகளை விலக்கி வைக்கிறது. அவற்றை உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.