New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/25/h2P5eMUXfJi7kpa9Q3Wm.jpg)
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குழந்தைப் பருவ புகைப்படங்களை அவரது சகோதரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறித்த நினைவலைகளை அவரது ரசிகர்கள் ஷேர் செய்கின்றனர்.
பாலிவுட் திரையுலகில் எந்த விதமான சினிமா பின்புலமும் இல்லாமல் நுழைந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவரின் யதார்த்தமான நடிப்பு, பலரது மனங்களில் இவரை நிலைநிறுத்தியது.
கடந்த 2020-ஆம் ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் அந்த காலகட்டத்தில் பெரும் பெசுபொருளானது.
இந்தியில், 'கை போ சே', 'ஷுத்த தேசி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்ஷி' போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'எம். எஸ். தோனி' திரைப்படம் இவரை உலக அளவில் பிரபலமடையச் செய்தது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனியின் வாழ்க்கை வரலாறை கூறும் இப்படத்தில், தோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் நடித்திருந்தார்.
இவரது மறைவிற்கு பின்னர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'தில் பெச்சாரா' திரைப்படம் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, சுஷாந்தின் நடிப்பு அதில் பெரிதும் பேசப்பட்டது. எனினும், அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாததாக அவருடைய ரசிகர்கள் கருதினர்.
இந்நிலையில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குழந்தைப் பருவ புகைப்படங்களை அவரது சகோதரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறித்த நினைவலைகளை அவரது ரசிகர்கள் ஷேர் செய்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.