New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/02/AQh1S83aaY4FubTkZOFd.jpg)
இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் இப்போது ஒரு பிரபலமான நடிகராக திகழ்கிறார். குறிப்பாக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற இவர், யாரென்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் போட்டோஷூட்கள் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும். இப்போதெல்லாம், நட்சத்திரங்கள் தங்களின் சிறுவயது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் இப்புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், இப்போது பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவரை உங்களால் அடையாளம் காண முடிகிறதா?
இவர் வேறு யாருமில்லை... நடிகர் பாபி சிம்ஹா தான்! 2007 ஆம் ஆண்டு வெளியான 'மாய கண்ணாடி' திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை பாபி சிம்ஹா தொடங்கினார்.
அதன் பின்னர், சில படங்களில் நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா' திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்று தந்தது. குறிப்பாக, அப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் 2014-ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா வென்றார்.
இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இப்பாத்திரத்தை எழுதும் போது ரஜினிகாந்தை மனதில் வைத்து இதனை உருவாக்கியதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார். மேலும், இப்பாத்திரத்தை திரையில் பார்க்கும் போது, '16 வயதினிலே' படத்தில் 'பரட்டை' என்று தாம் ஏற்று நடித்த கதாபாத்திரம் நினைவுக்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
அதன் பின்னர், 'உறுமீன்', 'ஆடாம ஜெயிச்சோமடா' போன்ற பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராகவும், முதன்மை கதாபாத்திரமாகவும் நடித்த பாபி சிம்ஹா, இந்தியன் - 2 திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.