New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/23/kJZyXBJqarzJC3TuyYkZ.jpg)
சோபிதா – நாக சைதன்யா இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர், இந்தியில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.
செஃப், காலக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்த சோபித துலிபாலா குட்டார்சரி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.
மூதான் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழில் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்
தற்போது இந்தியில் சித்தாரா, ஆங்கிலத்தில் மங்கி மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சோபித துலிபாலா விரைவில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்ய உள்ளார்.
சோபிதா – நாக சைதன்யா இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அவர் ஃபையர் இன் பஜார் என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.