பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி, தற்போது வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ், சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 5 வருடங்களுக்கு அதிகமாக ஒளிபரப்பானது.
இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் தான் வி.ஜே.சித்ரா. ஒரு கட்டத்தில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக முல்லை கேரக்டரில் நடிக்க வந்தவர் தான் காவ்யா அறிவுமணி.
சினிமாவில் பட வாய்ப்பு அதிகரித்ததால் காவ்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், மிரள் மற்றும் ரிபப்பரி ஆகிய படங்களில் நடித்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் காவ்யா அறிவுமணி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அவர் அளவுக்கு அதிகமாக க்ளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முழுக்க முழுக்க சிகப்பு நிறத்திலான உடையை அணிந்துள்ள காவ்யா, பேச்சு குறைவு சிகப்பு அதிகம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.