New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/06/VuNNp2D8uk8uM0eZSQf6.jpg)
சீரியல் மூலம் பிரபலமான அவர், ஒரு கட்டத்தில் கன்னட பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி திரைப்படத்தில் நடித்து வந்தார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.
சீரியல் மூலம் பிரபலமான அவர், ஒரு கட்டத்தில் கன்னட பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் சின்னத்திரைக்கு என்டரி ஆனார்.
ரீ-என்டரியில் ரச்சிதா ஜீ தமிழ் சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமல்லாமல், உப்புக்கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திய ரச்சிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் குறித்து எதுவும் பேசவில்லை.
இதனிடையே சமீபத்தில் கன்னடத்தில் வெளியான ரங்கநாயகா என்ற படத்தில் நடித்திருந்த ரச்சிதா மகாலட்சுமி, தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில், தெலுங்கில் தள்ளி மனசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி தற்போது வெளிநாட்டில் இருந்து வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.