New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/09/fOG5yQcAJ9YMwyutkO6k.jpg)
மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி பெருந்திருவிழாவில் பால்குடம் எடுத்து நேற்று பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் அன்று முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று அதிகாலை முதலே 10000 க்கு மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் நீராடி மஞ்சள் உடை அணிந்து பால்குடம் காவடி அலகுகுத்தி, பறக்கும்காவடி எடுத்து வழிபட்டனர்.
சிம்மக்கல் -அம்மன் சன்னதி -மீனாட்சி அம்மன் கோவில் -டி பி கே ரோடு மூலக்கரை வழியாக -திருப்பரங்குன்றம் சென்று அங்குள்ள உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதற்காக மதுரையில் போக்குவரத்து மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.