திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் (அக்.4) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இரவு பெரிய சேஷ வாகன வீதி உலா நடைபெற்றது.
2/5
விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை 5 தலைகளை கொண்ட சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
3/5
இந்தநிலையில், பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (அக்.6) காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்தார்.
Advertisment
4/5
விலங்குகளில் வலிமை மிக்கது சிங்கம். ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் விலங்குகளில் நான் சிம்மமாக இருப்பேன் என்பார். பாதி மனிதன், பாதி சிங்கம் உருவம் கொண்டது தான் நரசிம்மர் அவதாரம்.
5/5
இதை விளக்கும் வகையில் இன்று உற்சவர் மலையப்பசாமி சிங்க வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்ததார். இந்த பிரம்மோற்சவ விழா வரும் 12-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news