விழுந்து எழுந்தவர்களுக்கு உளுந்தங்கஞ்சி என்ற ஒரு பழமொழி கூறுவார்கள். அவ்வளவு சத்து மிக்க உடலை வலிமையாக்கும் உளுந்தங்கஞ்சி எப்படி செய்வது எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
2/7
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து
பச்சரிசி
உப்பு
நாட்டுச்சர்க்கரை
நெய்
முந்திரி
தேங்காய்
3/7
ஒரு கடாயில் கருப்பு உளுந்து போட்டு வறுத்து ஆற வைக்கவும். பின்னர் அதில் பச்சரிசி போட்டு வறுத்து இரண்டையும் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
Advertisment
4/7
பின்னர் இந்த பொடி தேவையான அளவு எடுத்த அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி விழாமல் கரைத்துக் கொள்ளவும் உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும். பின்னர் கொதிவரும் போது நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து அதனுடன் கலந்து கொதிக்க விடவும். நாட்டுச் சர்க்கரை சேர்த்தவுடன் பாத்திரம் அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
5/7
ஒரு தாளிப்பு கரண்டையில் நெய், முந்திரி பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து இந்த உளுந்தங்கஞ்சியில் சுவையான உளுந்து கஞ்சி ரெடி ஆகிவிடும். மிகவும் ருசியான இந்த உளுந்தங்கஞ்சியை சாப்பிடுவதன் மூலம் இடுப்பு எலும்பு பலமாகும். உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமும் கூட தரும்.
6/7
இது புரதச்சத்து நிறைந்ததாக இருப்பதற்கும், தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பை ஊக்குவிப்பதற்கும் பெயர் பெற்றது . இதில் உணவு நார்ச்சத்தும் உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது.
Advertisment
Advertisements
7/7
கூடுதலாக, உளுந்து கஞ்சி இரும்பின் நல்ல மூலமாகும், இது ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கும், பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கும் பங்களிக்கிறது. இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் இது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news