அரிய வானியல் நிகழ்வு: 'பிளட் மூன்' எனும் 'ரத்த நிலா'... இந்தியாவில் எப்போது, எப்படி காணலாம்?

செப்டம்பர் 7 அன்று, ஒரு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அப்போது நிலா சிவப்பு நிறமாக மாறி, ‘ரத்த நிலா’ (Blood Moon) என்று அழைக்கப்படும். இந்தியா உட்பட ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த அரிய நிகழ்வை முழுமையாகக் காண முடியும்.

செப்டம்பர் 7 அன்று, ஒரு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அப்போது நிலா சிவப்பு நிறமாக மாறி, ‘ரத்த நிலா’ (Blood Moon) என்று அழைக்கப்படும். இந்தியா உட்பட ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த அரிய நிகழ்வை முழுமையாகக் காண முடியும்.

author-image
WebDesk
New Update
Blood Moon

அரிய வானியல் நிகழ்வு: 'பிளட் மூன்' எனும் 'ரத்த நிலா'... இந்தியாவில் எப்போது, எப்படி காணலாம்?

விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரிய நிகழ்வு, செப்.7 அன்று வானில் நிகழ உள்ளது. அன்று, முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. அப்போது நிலா சிவப்பு நிறமாக மாறி, ‘ரத்த நிலா’ (Blood Moon) என்றழைக்கப்படும் அற்புதம் நிகழும். ஆசிய நாடுகள் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த முழு கிரகணத்தையும் அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாகக் காண முடியும். உலகின் மற்ற பல பகுதிகளில், கிரகணத்தின் சில கட்டங்களை மட்டுமே காண முடியும்.

Advertisment

சந்திர கிரகணத்தின்போது நிகழும் இந்த முழு நிலா, 'கார்ன் மூன்' (Corn Moon) என்றும் அழைக்கப்படுகிறது. முழு நிலவுக்கு வழங்கப்படும் பல புனைப்பெயர்களில் இதுவும் ஒன்று. செப்.7 அன்று நிகழும் முழு நிலா, சந்திர கிரகணத்துடன் இணைவதால், இது 'கார்ன் மூன் கிரகணம்' (Corn Moon Eclipse) என்றும் குறிப்பிடப்படலாம்.

செப்டம்பர் 7 அன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தை, இந்தியா, சீனா, ரஷ்யா, மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகள் போன்ற பகுதிகளில் தெளிவாகக் காணலாம். வட அமெரிக்காவில் இது தெரியாது. இருப்பினும், அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் பகுதி சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவில், நிலா உதிக்கும்போது கிரகணத்தின் ஒரு பகுதி தெரியும். இந்தியாவில், சந்திர கிரகணம் செப்டம்பர் 7 அன்று இரவு 8:58 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 8 அன்று அதிகாலை 1:25 மணி வரை நீடிக்கும். இந்த நேரத்தில், நிலா சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.

Advertisment
Advertisements

சந்திரனின் மேற்பரப்பை பூமியின் நிழல் முழுவதுமாக மறைக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரிய ஒளி நிலவின் மீது படும்போது, பூமி சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் வருவதால், அந்த ஒளி நிலவை அடைவதற்கு முன் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. இவ்வாறு ஒளி வளிமண்டலத்தின் வழியே செல்லும்போது, சிதறடிக்கப்படுகிறது. இதில், நீல நிறத்தின் குறுகிய அலைநீளங்கள் (shorter wavelengths) அதிகமாகச் சிதறடிக்கப்பட்டு, சிவப்பு நிறத்தின் நீண்ட அலைநீளங்கள் (longer wavelengths) நிலாவை நோக்கி வளைந்து செல்கின்றன. இந்தச் செயல்பாட்டினால், நிலவின் நிறம் முற்றிலும் மாறி, ரத்தம் போல் சிவப்பாகத் தோன்றுவதால், இது ‘ரத்த நிலா’ என்று அழைக்கப்படுகிறது.

moon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: