பூமியின் காந்தப்புலத்தில் விரிவடையும் பலவீனமான பகுதி: செயற்கை கோள்களுக்கு அச்சுறுத்தல்!

பூமியின் காந்தப் புலத்தில் உள்ள பலவீனமான பகுதி, தென் அட்லாண்டிக் ஒழுங்கின்மை பகுதி கடந்த 11 ஆண்டுகளில் (2014 முதல்) ஐரோப்பாவின் நிலப்பரப்பில் பாதியளவு அளவுக்கு விரிவடைந்துள்ளது.

பூமியின் காந்தப் புலத்தில் உள்ள பலவீனமான பகுதி, தென் அட்லாண்டிக் ஒழுங்கின்மை பகுதி கடந்த 11 ஆண்டுகளில் (2014 முதல்) ஐரோப்பாவின் நிலப்பரப்பில் பாதியளவு அளவுக்கு விரிவடைந்துள்ளது.

author-image
Meenakshi Sundaram S
New Update
Earth Magnetic Field Weakening

பூமியின் காந்தப் புலத்தில் விரிவடையும் பலவீனமான பகுதி: செயற்கை கோள்களுக்கு அச்சுறுத்தல்!

நம்மை விண்வெளிக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும் பூமியின் கண்ணுக்குத் தெரியாத காந்தப் புலம் (Magnetic Field), இப்போது மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. தென் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே உள்ள இந்தக் காந்தக்கவசத்தில் இருக்கும் 'பலவீனமான புள்ளி' (Weak Spot), கடந்த 11 ஆண்டுகளில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விரிவடைந்துள்ளது.

Advertisment

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 'ஸ்வார்ம்' செயற்கைக்கோள் கூட்டமைப்பு, 2014 ஆம் ஆண்டு முதல் சேகரித்த தரவுகளின்படி, இந்தக் காந்தப் பலவீனமான பகுதி, 'தென் அட்லாண்டிக் ஒழுங்கின்மை (South Atlantic Anomaly - SAA)' என்றழைக்கப்படுகிறது. இந்த முரண்பாடு, 2014 முதல் இன்று வரை கண்டம் ஐரோப்பாவின் பரப்பளவில் கிட்டத்தட்ட பாதியளவுக்கான பரப்பளவுக்கு விரிவடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்குப் பேராபத்து

இந்த முரண்பாடு விரிவடைவதன் விளைவு என்ன? காந்தப் புலம் பலவீனமாக இருப்பதால், தென் அட்லாண்டிக் பகுதி வழியாக பயணிக்கும் செயற்கைக்கோள்கள் இப்போது அதிகமான விண்வெளிக் கதிர்வீச்சுக்கு (Cosmic Radiation) ஆளாகின்றன. சூரியனில் இருந்து வரும் மின்சக்தி பெற்ற துகள்கள் (Charged Solar Particles) நேரடியாகத் தாக்குவதை எதிர்கொள்கின்றன. இது செயற்கைக்கோளின் மின்னணு சாதனங்களைச் சேதப்படுத்தலாம் அல்லது தற்காலிகமாக தகவல் தொடர்பு துண்டிப்பை (Communication Blackouts) ஏற்படுத்தலாம். விண்வெளிக் கருவிகளின் பாதுகாப்பிற்கு இது முக்கிய அச்சுறுத்தலாகும்.

பூமியின் காந்தக் கவசம், சுமார் 3,000 கி.மீ. ஆழத்தில் உள்ள உருகிய இரும்பு கொண்ட வெளி மையத்தில் (Molten Iron Outer Core) உருவாகிறது. திரவ இரும்பின் ஓட்டம் மின்னோட்டங்களை உருவாக்கி, நமக்குக் கவசமாகிறது. 'ஸ்வார்ம்' செயற்கைக்கோள்கள் பூமியின் மையத்தில் நடக்கும் மாற்றங்களை துல்லியமாக அளவிடுகின்றன. அதன் மூலம் கிடைத்த சில முக்கியத் தகவல்கள்:

Advertisment
Advertisements

19-ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவுக்கு அருகே முதலில் கண்டறியப்பட்ட இந்த முரண்பாடு, தற்போது ஆப்பிரிக்காவை நோக்கி கிழக்கு திசையில் வேகமாக விரிவடைந்து வருகிறது. ஆப்ரிக்காவுக்கு அருகில் காந்தப் புலம் பலவீனமடையும் ஒரு புதிய பகுதி உருவாகிறது. இங்கே, காந்தப் புலக் கோடுகள் எதிர்பாராத விதமாக மீண்டும் பூமியின் மையப்பகுதிக்குள் திரும்புவதைக் (Reverse Flux Patches) காண்கிறோம். இது மையப்பகுதிக்கும், மேலோட்டுக்கும் இடையில் நடக்கும் சிக்கலான புவி இயக்கவியல் செயல்முறைகளை (Geomagnetic Dynamics) காட்டுகிறது.

இந்த பலவீனமான புள்ளி ஒருபுறம் விரிவடைய, மறுபுறம் காந்தப் புலத்தின் மற்ற பகுதிகளில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சைபீரியா பகுதியில் காந்தத்தின் வலிமை அதிகரித்துள்ளது. கனடா பிராந்தியத்தில் காந்தப் புலம் பலவீனமடைந்துள்ளது. இந்த மாற்றங்கள், வடக்கு காந்த துருவம் மெதுவாகச் சைபீரியாவை நோக்கி நகர்வதுடன் தொடர்புடையவை.

2013-ல் ஏவப்பட்ட 'ஸ்வார்ம்' செயற்கைக்கோள் திட்டம், இந்தக் காந்தப் புலம் பற்றிய முக்கியமான தரவுகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. நம்மைப் பாதுகாக்கும் இந்தக் கவசம் எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள தரவுகள் இன்றியமையாதவை. விண்வெளி சொத்துக்களைப் பாதுகாக்கவும், விண்வெளி வானிலையை முன்னறிவிக்கவும் இந்த முரண்பாட்டைக் கண்காணிப்பது மிக அவசியம். 'ஸ்வார்ம்' திட்டம் 2030 ஆம் ஆண்டுக்கு மேலும் தொடரும் என்றும், பூமியின் ஆழத்தில் நடக்கும் மர்மங்களைப் பற்றிய முக்கியமான தரவுகளை வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: