காய்கறி மற்றும் பழங்களின் ஆயுளை நீட்டிக்க ஐஐடி கவுகாத்தி ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோ-ஆல்கா எக்ஸ்ராக்ட் மற்றும் பாலிசாக்கரைடுகள் பயன்படுத்தி உடலுக்கு தீங்கு விளைவிக்காக கோட்டிங்-யை(edible coating) உருவாக்கியுள்ளனர். உணவு வீணாக்கப்படுவதை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.
பழங்கள், காய்கறிகள் மரம்,செடியில் இருந்து பறித்தவுடன் சில நாட்களில் அழுகி விடுகிறது. இதை தடுத்து ஆயுளை நீட்டிக்க இந்த கோட்டிங்யை உருவாக்கியுள்ளனர். உடலுக்கு தீங்கு விளைவிக்காதபடி பொருட்கள் அதில் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், அன்னாசி மற்றும் கிவி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களில் கோட்டிங் தடவி சோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் விமல் கத்தியார் கூறுகையில், "கோட்டிங் பயன்படுத்துவதால் 2 மாதங்கள் வரை காய்கறிகள் மற்றும் பழங்களை பாதுகாக்க முடியும். கோட்டிங் செய்யப்பட்ட தக்காளி பழம் ஒரு மாதம் வரை கெடாமல் இருந்தது. தகுந்த வெப்பநிலையில் வைக்கப்பட்டது. அதேபோல், ஸ்ட்ராபெர்ரி பழங்களை 5 நாட்களுக்கு மேல் ப்ரஸாக வைத்திருக்க இயலாது. ஆனால் நாங்கள் உருவாக்கிய கோட்டிங் பயன்படுத்தியபோது 20 நாட்களுக்கு மேல் கெடாமல் இருந்தது" என்று கூறினார்.
விமல் கத்தியார், ஐஐடி கவுகாத்தியில் கெமிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக உள்ளார். இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
உடலுக்கு தீங்கு விளைவிக்காக கோட்டிங் (edible coating) 2 சப்ஸ்டென்ஸின் கலவையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. மைக்ரோ-ஆல்கா எக்ஸ்ராக்ட் மற்றும் பாலிசாக்கரைடுகள் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. எக்ஸ்ராக்ட் கடல் நுண்ணுயிரிகளான டுனாலியெல்லா டெரிடியோலெக்டாவிலிருந்து எடுக்கப்பட்டது. இது பெரும்பாலும் ஆல்கா எண்ணெய்க்கு பயன்படுத்தப்படுகிறது. மீன் எண்ணெய்க்கு மாற்றாக தாவர அடிப்படையிலான மாற்றாக இருக்கிறது.
ஆல்கா எண்ணெயைப் பிரித்தெடுக்கும் செயல்முறையில் ஒரு சப்ஸ்டென்ஸ் வெளியேற்றப்படுகிறது.
கத்தியார் மற்றும் அவரது குழுவினர் வெளியேற்றப்பட்ட சப்ஸ்டென்ஸ் பயன்படுத்தி கோட்டிங் உருவாக்கியுள்ளனர். இந்த சப்ஸ்டென்ஸை சிட்டோசன்யுடன் பயன்படுத்தி சாப்பிடுவதற்கு உகந்ததாக மாற்றியுள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளாக கத்தியார் மற்றும் அவரது குழுவினர் வெவ்வேறு வெர்ஷனில் கோட்டிங்யை பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இந்த கோட்டிங்யை மிக எளிதாக பயன்படுத்தலாம். விவசாயிகள் ஏற்கனவே இதுபோன்ற விளைபொருட்களை தினமும் பயன்படுத்தி வருகின்றனர் என்று கத்தியார் கூறினார். இந்த புதிய கோட்டிங்கின் பாதுகாப்பை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்தனர். BHK-21 செல்களை கோட்டிங்வுடன் பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளில் இருந்து கோட்டிங் பொருள் நச்சுத்தன்மையற்றவை மற்றும் உண்ணக்கூடிய தயாரிப்பு, பாதுகாப்பானவை என முடிவு செய்தனர்.
"இந்த பொருளின் விலை குறித்து கத்தியார் தற்போது தெரிவிக்கவில்லை. ஆனால் வணிகப் பொருளாக மாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார். தொழில்துறை நிறுவனங்களுடன் சேர்ந்து சந்தைப்படுத்த தயாராக இருக்கிறோம். முக்கியமான கண்டுபிடிப்பை சந்தைக்கு கொண்டு வர தொழில்துறையினர் முன்வர வேண்டும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க இது பயனுள்ளதாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil