/tamil-ie/media/media_files/uploads/2022/05/asteroid-fb.jpg)
Representational image
விண்வெளி குறித்த ஆய்வுகளை பல்வேறு உலக நாடுகள் செய்து வருகின்றன. விண்வெளி குறித்த புது புது தகவல்களை நாள்தோறும் தெரிந்து கொள்கிறோம். விண்வெளி பல்வேறு ஆச்சரியங்களை தருகிறது. விஞ்ஞானிகள் பல தகவல்களை சேகரித்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கின்றனர்.
இந்நிலையில், பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச் செல்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமி சூரியனை சுற்றி வருவது போல், நிலா பூமியை சுற்றி வருகிறது. இது பலருக்கும் தெரிந்த தகவல்.
ஆனால் பலருக்கும் தெரியாதது நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று வருகிறதாம். இதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச் செல்வதாக கூறியுள்ளனர். இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலா தோன்றிய போது பூமிக்கு மிக அருகில் இருந்ததாகவும் அதாவது அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது, 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரம் தொலைவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.