அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நேற்று(ஆகஸ்ட் 29) நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் பணியில் சோதனை முயற்சியாக ஈடுபட்டது. ஆனால் கடைசி நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக ராக்கெட் ஏவும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
நாசா ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் மூலம் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று வீரர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக ராக்கெட் மற்றும் ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இருந்தது. ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்வுன் தொடங்கப்பட்டது. என்ஜின் பழுது கண்டுபிடிக்கப்பட்டவுடன் பொறியியலாளர்கள் உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கவுண்ட்வுன் உத்தேசிக்கப்பட்ட நேரத்தை விட ராக்கெட் ஏவும் நேரம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது.
நாசாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆக அறியப்படும் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்), ஆளில்லா ஓரியன் விண்கலனை நிலவுக்கு அனுப்ப இருந்தது.
திரவ பொருட்கள் உள்ளடக்கிய நான்கு என்ஜினில், ஒன்றில் பழுது ஏற்பட்டது. என்ஜின் உள்டாங்கியில் திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் நிரப்பப்படும். ஆனால் 3ஆவது என்ஜினில் பழுது ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதை சீர் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
1, 2 மற்றும் 4 என்ஜின்களில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜனைப் பயன்படுத்தி 3ஆவது என்ஜினில் செலுத்த திட்டத்தை முன்மொழிந்தனர். ஆனால் அதுவும் செயல்படவில்லை. முயற்சி தோல்வியடைந்தது. இந்த கட்டத்தில், ஹைட்ரஜன் குழுவினர் வந்து மற்றொரு முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் அதுவும் செயல்படவில்லை. இறுதி நேரத்தில் பழுதுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. அதனால் தற்காலிகமாக திட்டம் நிறுத்தப்படுவதாக நாசா அறிவித்தது. ஆனால் அதுமட்டுமே காரணமாக குழு பார்க்கவில்லை.
டாங்கில் விரிசல்
என்ஜின் உள்டாங்கின் விளிம்பில் விரிசல் போல் இருப்பதாக பொறியாளர்கள் பார்த்தனர். ஆனால் கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் விரிசல் இல்லை எனத் தெரிவித்தனர். மாறாக, பனி காற்றால் கட்டி உருவானது. அதுதான் உள் சிக்கி உள்ளது என்று தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பும் போது ஹைட்ரஜன் கசிவு
ஆர்ட்டெமிஸ் திட்டக் குழு என்ஜினுக்கு இறுதி கட்டமாக எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது “slow filling” to “fast filling” ஹைட்ரஜன் என மாற்றியபோது, ஹைட்ரஜன் அதிகமாகி, நிர்ணயிக்கப்பட்ட 4 சதவீத அளவை தாண்டி பர்ஜ் கேனில் கசிய ஆரம்பித்தது.
இதையடுத்து குழு தரவுகளை ஆராய்ந்து மீண்டும் slow filling செய்தது. இவ்வாறு ஆர்ட்டெமிஸ் 1 சோதனை திட்டத்தின் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக நாசா கூறியுள்ளது.
செப்டம்பர் 2, வெள்ளிக்கிழமை பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் திட்டத்தை செயல்படுத்த நாசா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“