இரவில் ஒளிரும் தாவரங்கள்: வெறும் ரூ.115 செலவில் நவீன தொழில்நுட்பம்!

சீன ஆராய்ச்சியாளர்கள் செடிகளை (succulents) ஒளிரும் தாவரங்களாக மாற்றி ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் மரபணு மாற்றத்தை சாராமல், பாஸ்பர் துகள்களை செடியின் இலைகளில் செலுத்துவதன் மூலம் ஒளியை உமிழச் செய்கிறது.

சீன ஆராய்ச்சியாளர்கள் செடிகளை (succulents) ஒளிரும் தாவரங்களாக மாற்றி ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் மரபணு மாற்றத்தை சாராமல், பாஸ்பர் துகள்களை செடியின் இலைகளில் செலுத்துவதன் மூலம் ஒளியை உமிழச் செய்கிறது.

author-image
WebDesk
New Update
Scientists dark plants

இரவில் ஒளிரும் தாவரங்கள்: வெறும் ரூ.115 செலவில் நவீன தொழில்நுட்பம்!

அறிவியல் புனைகதைகளில் வரும் கற்பனையான ஒளியை உமிழும் தாவரங்கள், நிஜமாகிவிட்டன. சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், சாதாரண செடிகளை இரவு நேரத்தில் ஒளிரும் தாவரங்களாக மாற்றி, இந்த புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இது எப்படி சாத்தியமானது?

மரபணு மாற்றம் இல்லாமல் ஒளிரும் தாவரங்கள்

Advertisment

இந்த தாவரங்கள், மரபணு மாற்றப்பட்டவை அல்ல. மாறாக, ஒளியை உமிழும் ஆற்றலைக் கொண்டிருக்கும் பாஸ்பர் துகள்கள், தாவரங்களின் இலைகளுக்குள் செலுத்தப்படுகின்றன. இந்த பாஸ்பர் துகள்கள் நாம் சிறு வயதில் விளையாடிய ஒளிரும் பொம்மைகளில் பயன்படுத்தப்படுபவைதான். பகல் நேரத்தில் அல்லது சாதாரண LED விளக்கின் ஒளியில் இந்தப் பாஸ்பர் துகள்கள் ஆற்றலைச் சேமித்து, இருட்டானவுடன் அதை மெதுவாக ஒளியாக வெளியிடுகின்றன.

செடிகளின் அமைப்பு எவ்வாறு உதவுகிறது?

எச்செவேரியா மெபினா (Echeveria “Mebina”) என்ற சதைப்பற்றுள்ள தாவரம், இந்த ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இலைகள் அடர்த்தியான திசுக்களைக் கொண்டுள்ளதால், பாஸ்பர் துகள்கள் இலைகளில் சீராகப் பரவி, ஒளியை அதிக நேரம் உமிழ உதவுகின்றன. சில நிமிடங்கள் ஒளியில் வைத்தாலே, இந்தத் தாவரங்கள் சுமார் இரண்டு மணிநேரம் வரை ஒளியைத் தருகின்றன. இந்த வெளிச்சம் ஒரு சிறிய இரவு நேர விளக்குக்கு இணையாக இருக்கும்.

பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் தாவரங்கள்

ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு வகையான பாஸ்பர் துகள்களைப் பயன்படுத்தி, பச்சை, சிவப்பு, நீலம், ஊதா மற்றும் வெள்ளை போன்ற பல வண்ணங்களில் ஒளியை உமிழும் தாவரங்களை உருவாக்கி உள்ளனர். ஒளிரும் தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சுவரானது, இருட்டில் படிப்பதுக்கு போதுமான வெளிச்சத்தைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ஒரு ஒளிரும் தாவரத்தை உருவாக்க சுமார் 10 நிமிடங்கள் செலவாகிறது. இதற்கான செலவு தோராயமாக $1.40 (இந்திய மதிப்பில் 115 ரூபாய்) ஆகும். இந்த கண்டுபிடிப்பு ஒரு ஆரம்பக்கட்ட முயற்சிதான். இந்தத் தாவரங்களின் நீண்டகாலப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தாக்கம் போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. எதிர்காலத்தில், இந்தத் தொழில்நுட்பத்தை மற்ற தாவர வகைகளிலும் பயன்படுத்தி, ஒளியின் ஆயுளை அதிகரிப்பது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த ஒளிரும் தாவரங்கள், நமது வீடுகளுக்கு ஒரு புதிய தோற்றத்தைக் கொடுப்பதுடன், எதிர்காலத்தில் மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு ஒளியைத் தரும் நல்ல தீர்வாகவும் மாறலாம்.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: