Advertisment

'செயற்கை ஒளிச் சேர்க்கை' மூலம் இருளில் தாவரங்களை வளர்க்கும் விஞ்ஞானிகள்!

கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருட்டில் உணவை வளர்க்க இந்த செயல்முறை பயன்படுத்தப்படலாம், இது விண்வெளி உட்பட பல பயன்பாடுகளில் பயனுள்ளதாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
artificial photosynthesis

Scientists grow plants in complete darkness using artificial photosynthesis

யுசி ரிவர்சைடு மற்றும் டெலாவேர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், "செயற்கை ஒளிச்சேர்க்கை" மூலம் இருளில் தாவரங்களை வளர்ப்பதற்கு ஒரு வழியை உருவாக்கியுள்ளனர். உயிரியல் ஒளிச்சேர்க்கைக்கு பதிலாக "அசிடேட்"(acetate) ஊடகத்தில் முழுமையான இருளில் தாவரங்களை ஆராய்ச்சியாளர்கள் வளர்த்தனர்.

Advertisment

கார்பன் டை ஆக்சைடு, மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றை அசிடேட்டாக மாற்ற இரண்டு-படி மின்னாற்பகுப்பு செயல்முறையை (electrocatalytic process) பயன்படுத்தினர். உணவு உற்பத்தி செய்யும் தாவரங்கள்’ வளருவதற்கு இந்த அசிடேட்டை உட்கொண்டன. சுவாரஸ்யமாக, சூரிய சக்தி பேனல்களுடன் இணைந்தால், சில உணவுகளில் உள்ள உயிரியல் ஒளிச்சேர்க்கையை விட, 18 மடங்கு அதிகமாக சூரிய ஒளியின் மாற்றும் திறனை இந்த அமைப்பு அதிகரிக்கலாம்.

கார்பன் டை ஆக்சைடு போன்ற மூலப்பொருட்களை அசிடேட்டாக மாற்ற ஆராய்ச்சியாளர்கள் எலக்ட்ரோலைசரைப் பயன்படுத்தினர். உற்பத்தி செய்யப்படும் அசிடேட்டின் அளவை அதிகரிப்பதன் மூலமும், துணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும்’ உணவு உற்பத்தி செய்யும் தாவரங்களின் வளர்ச்சியை ஆதரிக்க அதன் வெளியீடு உகந்ததாக இருந்தது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது இன்றுவரை எலக்ட்ரோலைசரில் உற்பத்தி செய்யப்பட்ட அசிடேட்டின்’ மிக உயர்ந்த அளவுகளில் சிலவற்றை விளைவித்தது.

"எங்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட அதிநவீன இரண்டு-படி டேன்டெம் CO2 மின்னாற்பகுப்பு அமைப்பை (two-step tandem CO2 electrolysis) பயன்படுத்தி, வழக்கமான CO2 மின்னாற்பகுப்பு வழிகள் மூலம் அணுக முடியாத அசிடேட்டை நோக்கிய உயர் தேர்வை எங்களால் அடைய முடிந்தது" என்று டெலாவேர் பல்கலைக்கழகத்தின் இணை எழுத்தாளர் ஃபெங் ஜியாவோ ஒரு செய்தி அறிக்கையில் கூறினார்.

publive-image

உயிரியல் ஒளிச்சேர்க்கைக்கு பதிலாக அசிடேட் ஊடகத்தில் முழு இருளில் வளரும் தாவரங்கள் (Image credit: UC Riverside)

காளான்களை உற்பத்தி செய்யும் பச்சை பாசி, ஈஸ்ட் மற்றும் பூஞ்சை மைசீலியம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு உற்பத்தி செய்யும் உயிரினங்களை இருட்டில் வளர்க்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று சோதனைகளில் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

நேச்சர் ஃபுட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, ஒளிச்சேர்க்கை மூலம் வளர்ப்பதை விட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பாசிகளை உற்பத்தி செய்வது நான்கு மடங்கு ஆற்றல் திறன் கொண்டது.

பொதுவாக சோளத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சர்க்கரையைப் பயன்படுத்தி எப்படிப் பயிரிடப்படுகிறதோ அதைவிட ஈஸ்ட் உற்பத்தியானது 18 மடங்கு அதிக ஆற்றல் திறன் வாய்ந்தது என்றும் சக மதிப்பாய்வு கட்டுரை கூறுகிறது.

காராமணி, தக்காளி, புகையிலை, அரிசி, கடுகு மற்றும் பச்சை பட்டாணி ஆகியவற்றை வளர்க்க இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திறனையும் ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர்.

சூரியனைச் சார்ந்திருப்பதை அகற்றுவதன் மூலம், காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் நாம் காணக்கூடிய கடினமான சூழ்நிலையில் உணவை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை செயற்கை ஒளிச்சேர்க்கை திறக்கிறது. இத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான சூழலில் பயிர்களை வளர்க்க முடிந்தால், வறட்சி, வெள்ளம் மற்றும் குறைந்த நிலப்பரப்பு ஆகியவை உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்காது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment