Solar eclipse 2022:உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்டோபர் 25) பகுதி அளவு சூரிய கிரகணம் தென்பட்டது. இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கிட்டத்திட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பகுதி சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது.
Advertisment
ஐரோப்பா நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளிலில் கிரகணம் தென்பட்டது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தை மக்கள் கண்டனர்.
சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. உலக நேர கால அட்டவணைப்படி மதியம் 2.15 முதல் மாலை 6.30 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்தியாவில் வெவ்வேறு நேரங்களில் கிரகணம் தென்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் மாலை 5.14க்கு தொடங்கி 5.45 மணி வரை 30 நிமிடங்கள் கிரகணம் தென்பட்டது. தமிழகத்தில் 8% வரை கிரகணம் தெரிந்தது. எக்லிப்ஸ் கண்ணாடிகள், சோலார் பில்டர்ஸ் பயன்படுத்தி மக்கள் பகுதி சூரிய கிரகணத்தை கண்டனர். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய சூரிய கிரகணத்தின் வண்ணக் காட்சிகளை கீழே காணலாம்.
பாட்னாவில் தென்பட்ட பகுதி சூரிய கிரகணம்
Advertisment
Advertisements
பாட்னாவில் தென்பட்ட பகுதி சூரிய கிரகணம்
டெல்லியில் சூரிய கிரகணத்தின் அழகான காட்சி
பெல்ஜியனில் காணப்பட்ட சூரிய கிரகணம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news