/indian-express-tamil/media/media_files/2025/11/01/illusion-2025-11-01-16-33-31.jpg)
80% பேரை ஏமாற்றும் ஆப்டிகல் இல்லுஷன்... 20% பேருக்கு தெரியாதாம்! ஏன் தெரியுமா?
இணையத்தை ஒரு ஸ்டேடிக் படம் இப்போது மிரட்டி வருகிறது! வெள்ளைப் பின்னணியில் மையத்தில் இருக்கும் ஒரு கருப்புப் புள்ளி, நீங்க அதைப் பார்க்கும்போது, சுரங்கப்பாதைபோல் உங்களுக்குள் இழுத்து, விரிவடைவது போல் தோன்றுகிறதா? அப்படியானால், உங்க மூளையைப் பற்றிய ஆச்சரியமூட்டும் ரகசியம் ஒன்று இருக்கிறது. இது வெறும் காட்சிப் பிழை அல்ல; இது உங்கள் உடலியலை மாற்றும் திறன் கொண்டது
ஓஸ்லோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இந்தப் புதிரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளனர். நீங்கள் அந்தப் படத்தை உற்றுப் பார்க்கும்போது, உங்கள் மூளை அதை வெறும் படமாகப் பார்ப்பதில்லை. நீங்க இருண்ட அறைக்குள் செல்வது போல், உங்க கண்கள் ஒரு உண்மையான இருண்ட சூழலுக்குத் தயாராகின்றன. இதன் விளைவாக, உங்கள் கருவிழிகள் (Pupils) தானாகவே விரிகின்றன. இது முழுக்க முழுக்க அனிச்சை செயல்.
நாம் என்ன பார்க்கிறோம் என்று நம்புகிறோமோ, அதற்கு மூளையின் ஆழமான அமைப்பு பதிலளிக்கிறது. மையத்தில் கருப்புக்குப் பதிலாக வண்ணங்களைப் பார்த்தால், கருவிழிகள் சுருங்குகின்றன. நாம் கற்பனையாகக் காணும் ஒளி மாற்றத்திற்கும் நம் உடல் வினை புரிகிறது. நமது கண்கள் உண்மையான ஒளிக்கு மட்டுமல்ல, நம் சுற்றுச்சூழலில் என்ன நடப்பதாக நாம் நம்புகிறோமோ அதற்கும் பதிலளிக்கிறது.
இந்த ஆய்வின் மிகவும் குழப்பமான பகுதி இதுதான். சோதிக்கப்பட்டவர்களில் சுமார் 20% பேருக்கு இந்தப் படம் விரிவடைவதாக உணரவே இல்லை. அவர்களுக்கு எந்தவிதமான கருவிழி மாற்றமும் இல்லை. அவர்கள் வெறுமனே ஒரு கருப்புப் புள்ளியை மட்டுமே பார்த்தார்கள். இந்தக் குழுவினருக்கு ஏன் இந்த மாயை வேலை செய்யவில்லை என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் புரியவில்லை. பார்வை குறைபாடு, கவனக்குறைவு போன்ற காரணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு தனிநபரின் மூளையும் காட்சி யதார்த்தத்தை எவ்வாறு கட்டமைக்கிறது என்பதையும், சில மூளைகள் குறிப்பிட்ட மாயைகளைப் புறக்கணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பற்றிப் பல கேள்விகள் எழுப்புகிறது.
இந்த மாயை, மூளையின் அற்புதமான தழுவல் தன்மையைக் காட்டுகிறது. நரம்பியல் தாமதங்களைச் சமாளிக்க, அடுத்து என்ன நடக்கும் என்று மூளை எப்போதும் முன்னறிவித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு இருண்ட இடத்திற்குள் செல்லப்போவதாக அது கணித்து, அதற்கேற்ப நம் கண்களைத் தயார் செய்கிறது. மூளை என்பது வெறும் கேமரா அல்ல. அது ஒரு கதைசொல்லி, சில நேரங்களில் ஒளி மாறுவதற்கு முன்பே அது அத்தியாயத்தை எழுதி விடுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us