சிவப்பு அரக்கனாக மாறும் சூரியன்; பூமி தகிக்கும்; கடல் வற்றும்: ஆனா இதெல்லாம் இப்போ இல்லை மக்களே!

நாசாவின் கணிப்புப்படி, நமது சூரியன் இன்னும் சுமார் 5 பில்லியன் (500 கோடி) ஆண்டுகளில் இறக்கத் தொடங்கும். அதன் முக்கிய எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்தவுடன், அது ஒரு 'சிவப்பு அரக்கனாக' (Red Giant) பிரம்மாண்டமாக வீங்கும்.

நாசாவின் கணிப்புப்படி, நமது சூரியன் இன்னும் சுமார் 5 பில்லியன் (500 கோடி) ஆண்டுகளில் இறக்கத் தொடங்கும். அதன் முக்கிய எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்தவுடன், அது ஒரு 'சிவப்பு அரக்கனாக' (Red Giant) பிரம்மாண்டமாக வீங்கும்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Sun dies

சூரியன் பெரிதாக மாறும்; பூமி தகிக்கும்; கடல் வற்றும்: ஆனா இதெல்லாம் இப்போ இல்லை மக்களே!

ஒவ்வொரு நாளும் நமக்கு ஒளியும் உயிரும் தரும் நமது சூரியன், என்றென்றும் இப்படியே இருக்காது. விஞ்ஞானிகள், குறிப்பாக நாசா, நமது நட்சத்திரத்தின் மரணத்திற்கான கவுண்ட்டவுனை கணித்துள்ளனர். இன்னும் சுமார் 500 கோடி (5 பில்லியன்) ஆண்டுகள்... அதுதான் சூரியனின் இறுதி அத்தியாயத்திற்கான தொடக்கப் புள்ளி.

Advertisment

சூரியனின் மரணம் 500 கோடி ஆண்டுகளில் நிகழ்ந்தாலும், பூமிக்கான ஆபத்து மணி மிகச் சீக்கிரமே ஒலிக்கத் தொடங்கிவிடும். நாசாவின் சூப்பர் கம்ப்யூட்டர் கணக்கீடுகளின்படி, இன்னும் சுமார் 100 கோடி (1 பில்லியன்) ஆண்டுகளில், சூரியனின் பிரகாசம் மெல்ல மெல்ல அதிகரிக்கும். இந்த அதீத வெப்பம், நமது நீலக் கிரகத்தின் பெருங்கடல்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கொதிக்க வைக்கும். ஆம், கடல்கள் அனைத்தும் வற்றி, பூமி சுட்டெரிக்கும் ஒரு வறண்ட பாலைவனமாக மாறும். வளிமண்டலம் சிதைந்துபோகும், பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான தடம் சுவடு தெரியாமல் அழிந்துவிடும்.

நேரம் செல்லச் செல்ல, சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் மையத்தில் இருக்கும் ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்துவிடும். எரிபொருள் தீர்ந்த ஒரு இன்ஜினைப் போல, சூரியனின் இயக்கம் மாறும். அது கட்டுக்கடங்காமல் வீங்கத் தொடங்கும். இந்த நிலைக்குப் பெயர் தான் 'சிவப்பு அரக்கன்' (Red Giant).

நாசாவின் கணிப்புப்படி, சூரியன் அதன் தற்போதைய அளவை விட 100 முதல் 150 மடங்கு பிரம்மாண்டமாகப் பெரிதாகும். அப்படி வீங்கும்போது, அதன் அருகில் இருக்கும் கிரகங்களை அது ஈவு இரக்கமின்றி விழுங்கும். புதன், வெள்ளி ஆகிய கிரகங்கள் சூரியனின் நெருப்புக் குழம்புக்குள் காணாமல் போகும். நமது பூமியும் சூரியனால் அப்படியே விழுங்கப்பட மிக அதிக வாய்ப்புள்ளது. இந்த இராட்சத அவதாரம் சிறிது காலமே நீடிக்கும். அதன் பிறகு, சூரியன் தனது வெளிப்புற அடுக்குகளை பில்லியன் கணக்கான மைல்களுக்கு விண்வெளியில் ஊதித் தள்ளும். இந்த வண்ணமயமான நிகழ்வு 'பிளானட்டரி நெபுலா' (Planetary Nebula) என்று அழைக்கப்படுகிறது.

Advertisment
Advertisements

இந்த வெளிப்புற அடுக்குகள் அனைத்தும் சிதறிய பிறகு, சூரியனின் அதி வெப்பமான, சுருங்கிய மையக்கரு மட்டும் எஞ்சி நிற்கும். அதுவே சூரியனின் சடலம். ஒளியை இழந்த அந்த நட்சத்திர மிச்சத்திற்குப் பெயர் 'வெள்ளைக் குள்ளன்' (White Dwarf). ஒருவேளை, சூரியன் வீங்கும்போது பூமி விழுங்கப்படாமல் தப்பித்தாலும் (அதன் சுற்றுப்பாதை சற்று விலகிச் செல்ல வாய்ப்புள்ளது), அதனால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், 100 கோடி ஆண்டுகளிலேயே கடல்கள் வற்றி, பூமி ஒரு உயிரற்ற பாறையாக மாறிவிட்டிருக்கும்.

சூரியனின் மரணம் நமது சூரிய மண்டலத்தின் கதையை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், அது வீசியெறியும் பொருட்கள், பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் புதிய நட்சத்திரங்களும் புதிய கிரகங்களும் உருவாகக் காரணமாக அமையலாம். இது ஒரு முடிவல்ல, ஒரு பிரபஞ்ச சுழற்சியின் மறு தொடக்கமே.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: