/indian-express-tamil/media/media_files/2025/11/03/what-happens-when-you-die-2025-11-03-21-29-44.jpg)
மரணத்தின் விளிம்பில் என்ன நடக்கும்? வர்ஜீனியா பல்கலை. விஞ்ஞானிகளின் வியப்பூட்டும் ஆய்வு!
மரணத்திற்கு மிக அருகில் செல்லும்போது என்ன நடக்கும் என்று நீங்க எப்போதாவது யோசித்ததுண்டா? புதிய ஆய்வின்படி, மரணத்தின் விளிம்பிற்குச் செல்லும் மனித உடல், "தனது உடலுக்கு வெளியே மிதப்பது", "ஒரு டன்னல் வழியாக பிரகாசமான ஒளியை நோக்கி நகர்வது", அல்லது "அமைதியை உணர்வது" போன்ற தெளிவான உணர்வுகளை அனுபவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மரணத்தின் மர்மம் குறித்த ஆய்வில், வர்ஜீனியா பல்கலை. விஞ்ஞானிகள் (University of Virginia - UVA) நடத்திய சமீபத்திய ஆய்வு சிறிய உதவியைச் செய்துள்ளது. கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் மருத்துவ நெருக்கடிகளில் இருந்து தப்பிப் பிழைக்கும் நோயாளிகளில், சுமார் 15% பேர் இந்த விசித்திரமான நிகழ்வை (phenomenon) அனுபவிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வின் முடிவுகள் கூறுவது என்ன?
வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் மனநல மருத்துவம் மற்றும் நரம்பியல் நடத்தை அறிவியல் துறையின் விஞ்ஞானிகள், "மரணத்தின் விளிம்பு அனுபவத்தை" (Near-Death Experience - NDE) பெற்றதாகக் கூறிய 167 நபர்களிடம் கணக்கெடுப்பு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் 'சைக்காலஜி ஆஃப் கான்ஷியஸ்னஸ்: தியரி, ரிசர்ச் அண்ட் பிராக்டிஸ்' (Psychology of Consciousness: Theory, Research and Practice) என்ற இதழில் வெளியிடப்பட்டன. இத்தகைய தருணங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் நிரந்தரமான தாக்கத்தை (permanent mark) ஏற்படுத்தக்கூடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த மரண விளிம்பு அனுபவத்திற்குப் பிறகு, சுமார் 70% மக்கள் தங்கள் மதம் அல்லது ஆன்மீக நம்பிக்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தை அனுபவிப்பதாகவும் பதிவாகியுள்ளது. மேலும், அவர்கள் மரணத்தை பற்றிய பயம் குறைந்தவர்களாக மாறுகிறார்கள். 64% பங்கேற்பாளர்கள் இந்த அனுபவத்திற்குப் பிறகு நிபுணத்துவம் வாய்ந்த அல்லது ஆன்மீக ஆதரவைத் தேடியுள்ளனர், அவர்களில் 78% பேருக்கு அது உதவியாக இருந்ததாகத் தெரிவித்தனர்; இருப்பினும், பலர் தங்களின் அனுபவத்தைப் பிறர் புரிந்துகொள்வதில் சிரமப்படுவதாகக் கூறினர்.
"இந்த நோயாளிகளையும் அவர்களின் குறிப்பிட்ட தேவைகளையும் எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்த ஆராய்ச்சி இன்னும் குறைவாகவே உள்ளது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யவும், இந்தக் கேள்விகளைத் தொடரவும் மருத்துவர்கள் நேரத்தையும் கவனத்தையும் ஒதுக்க இந்த ஆய்வு ஊக்குவிக்கும் என நம்புகிறோம்," என்று ஆய்வாளர் மாரீடா பெஹ்லிவனோவா (Marieta Pehlivanova) நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us