Advertisment

ரோஹித் சர்மா இடத்தை நிரப்பிய யுவராஜ் சிங் சிஷ்யன்... அதிரடி சதம் விளாசி சாதனை!

தொடக்க ஆட்டக்காரராக அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மாவுக்கு பிறகு, அவருடைய இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், யுவராஜ் சிங் சிஷ்யன் அபிஷேக் சர்மா நிரப்பியுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிதுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Abisheik Sharma

அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மாவுக்கு பிறகு, அவருடைய இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், யுவராஜ் சிங் சிஷ்யன் அபிஷேக் சர்மா நிரப்பியுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிதுள்ளனர்.

Advertisment

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே சனிக்கிழமை (06.07.2024) நடந்த முதல் டி20 போட்டியில் அறிமுகமான அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

ஆனாலும், அபிஷேக் சர்மாவுக்கு 2வது டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் அபிஷேக் சர்மா பேட்டிங்கில் வான வேடிக்கை நடத்தி தன்னை நிரூபித்தார். அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சுப்மன் கில் 2 பந்துகளில் அவுட் ஆனார். ஆனால், அபிஷேக் சர்மா சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து மிரட்டினார். பவர் பிளேவில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா பின்னர் நிதானமாக விளையாடினார். 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார்.  அடுத்த 16 பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடினார். 

மேயர்ஸ் வீசிய 11வது ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்களை விளாசினார். இதன் மூலம், அபிஷேக் சர்மா 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 82 ரன்களில் இருந்த போது, ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை சதத்தை பதிவு செய்தார். 

இறுதியாக 47 பந்துகளில் 8 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 100 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரோகித் சர்மா விட்டுச் சென்ற இடத்தை யுவராஜ் சிங் சிஷ்யன் அபிஷேக் சர்மா எளிதாக நிரப்பியுள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன்ர்.

முதல் 50 ரன்களை 33 பந்துகளிலும் அடுத்த 50 ரன்களை வெறும் 13 பந்துகளிலும் குவித்த அபிஷேக் சர்மா, தன்னை நிரூபித்துள்ளார். 

2வது இன்னிங்ஸிலேயே சதமடித்ததன் மூலமாக இந்திய அணிக்காக குறைந்த இன்னிங்ஸ்களிலேயே முதல் சதத்தை விளாசி வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பாக இந்திய அணிக்காக ஆடிய தீபக் ஹூடா 3வது இன்னிங்ஸில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. இதனை 2 இன்னிங்ஸில் அடித்து அபிஷேக் சர்மா வரலாறு படைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

cricket news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment