Advertisment

பிறந்தநாளில் கோலியை கலாய்த்த சி.எஸ்.கே வீரர்... பதிலடி போஸ்ட் போட்ட அனுஷ்கா சர்மா!

விராட் கோலியின் பிறந்தநாளில் அவரது பந்துவீச்சை கேலி செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை கோலி ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அனுஷ்கா சர்மா தனது பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார்

author-image
WebDesk
New Update
Anushka Sharma respond CSK For Mocking Virat Kohli On Birthday Fans react Tamil News

சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோவுக்கு அனுஷ்கா சர்மா தனது பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Virat-kohli | anushka-sharma | chennai-super-kings: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வரும் விராட் கோலி நேற்று (நவம்பர். 5) தனது 35வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இந்திய மண்ணில் தற்போது நடைபெற்று உலகக் கோப்பை இந்திய அணியில் கோலி களமாடி வரும் நிலையில், நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் சதம் விளாசி 101 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. 

Advertisment

இந்நிலையில், விராட் கோலியின் பிறந்தநாளில் அவரது பந்துவீச்சை கேலி செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை கோலி ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோவுக்கு அனுஷ்கா சர்மா தனது பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார் என்றும் கூறி வருகிறார்கள். 

போஸ்ட் போட்ட சி.எஸ்.கே 

இந்நிலையில், தனது பிறந்தநாள் விழாவை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடிய கோலிக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்தார்கள். அந்த வகையில், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கோலிக்கு பிறந்த நாள் தெரிவித்தது. இதன்தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சி.எஸ்.கே) முன்னாள் வீரர்களான இந்திய வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் மற்றும் தென் ஆப்ரிக்க வீரரான ஆல்பி மோர்கல் ஆகியோர் விராட் கோலியின் பந்துவீச்சு குறித்து விவாதிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. 

அந்த வீடியோவில் ரசிகர்கள் "கோலி பந்துவீச வேண்டும்" என ஆரவாரம் செய்வதும் இணைக்கப்பட்டிருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசிய ஆல்ரவுண்டர் வீரர்  ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக வெளியேறியதால், மீதமிருந்த 3 பந்துகளை கோலி வீசியிருந்தார். அதனால், கோலியை தொடர்ந்து பந்துவீச அனுமதிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

ஒரு ஓவரில் 24 ரன்கள் 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோவில் பத்ரிநாத் ஆல்பியிடம் 'கோலி கோ பவுலிங் தோ' என்று ரசிகர்களின் ஆரவாரம் குறித்தும், அவருக்கு சில ஓவர்கள் பந்து வீச வாய்ப்பளிக்க வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆல்பி மோர்கல், விராட் பந்துவீச விரும்பினால், அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால், கோலி வீசிய ஒரு ஓவரில் தான் 28 ரன்களை குவித்து குறித்தும் அவர் குறிப்பிட்டார். 

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 2012 ஐ.பி.எல் போட்டியின் போது, ​​சென்னை அணி இரண்டு ஓவர்களில் வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்ய களம்புகுந்த மோர்கல் கோலி வீசிய ஓவரில் 28 ரன்களை குவித்து மிரட்டினார். அந்தப் போட்டியை சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

“விராட் கோலி மீது பயம் இருக்கலாம். அவர் உங்களைப் போன்ற ஒருவருக்கு பந்துவீச விரும்பினால் தவிர, அது எப்படி என்று உங்களுக்குத் தெரியும். இந்திய கேப்டன் அப்படி ஒரு பெரிய முடிவை எடுக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். ஆனால் விராட் பந்து வீச விரும்பினால், அதை அவருக்குக் கொடுங்கலாம். அவரால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் உண்மையில் பந்து வீச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நான் அடிக்கடி சமூக ஊட்டங்களில் பார்க்கிறேன். மக்கள் அதைப் பற்றி பேசி வருகிறார்கள். 

விராட்டுக்கு எதிராக நான் விளையாடியதற்காகத் தான் மக்கள் என்னை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர் பந்துவீசி தன்னை மீட்டுக்கொள்ளவார் என்று நினைக்கிறேன்." என்று ஆல்பி மோர்கல் கூறினார். 

பதிலடி 

இந்த நிலையில், விராட் கோலி குறித்து, அதுவும் அவரது பிறந்தநாளில் ஆல்பி மோர்கல் இப்படி கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ அனுஷ்கா சர்மாவிற்கு சி.எஸ்.கே மீது வெறுப்பை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர். விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, விராட் கோலியின் தனித்துவமான பந்துவீச்சு சாதனையின் புகைப்படத்தை வெளியிட்டார். இது சி.எஸ்.கே-வின் வீடியோவிற்கு பதிலளிக்கும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். 

"அவர் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு பாத்திரத்திலும் விதிவிலக்கானவர்! ஆனால் எப்படியோ அவரது புகழ்பெற்ற தொப்பியில் மேலும் இறகுகளைச் சேர்த்துக்கொண்டே இருக்கிறார், இந்த வாழ்க்கையிலும் அதற்கு அப்பாலும் முடிவில்லாமல், ஒவ்வொரு வடிவத்திலும், அது எதுவாக இருந்தாலும் சரி, ”என்று அனுஷ்கா சர்மா பதிவிட்டு இருந்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai Super Kings Virat Kohli Anushka Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment