கோலி, கில்-லுக்கு டஃப் கொடுக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்… மிரட்டும் சிக்ஸ் பேக் போஸ்!
சிக்ஸ் பேக் வைத்திருக்கும் விராட் கோலி, சுப்மன் கில், ரிங்கு சிங் போன்ற இந்திய வீரர்களுடன் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் வீரரான அர்ஜுன் டெண்டுல்கரும் இணைந்துள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் தனது சமீபத்திய இன்ஸ்டா ஸ்டோரியில் சிக்ஸ் பேக்-குடன் மிரட்டல் போஸ் கொடுத்து இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி வந்த பிறகு, அவர் தனது உடலை பராமரிப்பதில் அதீத கவனம் எடுத்துக்கொண்டார். அதற்கேற்றாற்போல் உணவுகளை எடுத்துக்கொண்டார். நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை நிறுத்தினார். குறிப்பிட்ட வகையான உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தார்.
Advertisment
இது கோலிக்கு பல வகையில் உதவியது. அவரது தடிமனான உடல் அவருக்கு ஏராளமான ரன்களை எடுக்க உதவியது. களத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும், அசத்தலான கேட்ச்களை பிடிக்கவும் உதவியது. இதன்மூலம் அவர் உட்சபட்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். தற்போது அவரைப் பார்த்து, பல இந்திய கிரிக்கெட் வீரர்களும் அதே பாதையில் சென்றுள்ளனர். இன்று, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சிக்ஸ் பேக் என்பது அரிதான விஷயம் அல்ல. விராட் கோலி, சுப்மன் கில், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகிய அனைவரும் நல்ல உடல்வாகு கொண்டவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த இந்திய வீரர்களுடன் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் வீரரான அர்ஜுன் டெண்டுல்கரும் இணைந்துள்ளார். இப்போது பல ஆண்டுகளாக அவர் ஜிம்மிற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாக உழைத்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சட்டை இல்லாத புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மிரட்டல் சிக்ஸ் பேக்-குடன் போஸ் கொடுத்துள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 3 ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) அணியில் இருந்து வருகிறார். அவர் இந்த ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமான நிலையில், சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில், அர்ஜுன் கோவா அணிக்காக விளையாடுகிறார்.
கடந்த சீசனில் கோவா அணிக்காக அறிமுகமான அவர், தனது அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்தார். சச்சின் டெண்டுல்கரும் தனது ரஞ்சி கோப்பை அறிமுக போட்டியில் சதம் அடித்தது இருந்தார். அவருக்கான இடத்திற்கு அதிக போட்டி நிலவியதால் மும்பை அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் கோவாவுக்கு மாற வேண்டியிருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil