Naveen Kumar - Pawan Sehrawat - Sunil Kumar - Asian Kabaddi Championships 2023 Tamil News: 11வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் பூசானில் ஜூன் 27 முதல் 30, 2023 வரை நடைபெற உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி நெருங்கி வரும் நிலையில், முன்னாள் கேப்டன் தீபக் ஹூடா மற்றும் பிரதீப் நர்வால், ராகுல் சவுதாரி மற்றும் சுரேந்தர் நாடா போன்ற மூத்த வீரர்கள் அணியில் இடம் பிடிக்கவில்லை. இதனால், அணியில் புதிய கேப்டனுக்கான தேடல் தொடர்கிறது. அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் அணியை உற்சாகப்படுத்தவும், வியூகம் வகுக்கவும், வெற்றியை நோக்கி வழிநடத்தவும் கூடிய ஒரு கேப்டனை கண்டுபிடிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023ல் இந்தியாவை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
நவீன் குமார்
"நவீன் எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும் நவீன் குமார், வளர்ந்து வரும் கபடி நட்சத்திரமாக திகழ்கிறார். ப்ரோ கபடி லீக் ( பிகேஎல்) தொடரின் 8வது சீசனில் சாம்பியனான நவீன், அவரது மின்னல் வேக ரெய்டுகள் மற்றும் நம்பமுடியாத சுறுசுறுப்பு காரணமாக டிஃபண்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். பிகேஎல் தொடரில் இதுவரை 85 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 948 ரெய்டு புள்ளிகளுடன், 6வது அதிக புள்ளிகள் பெற்ற வீரராக வலம் வருகிறார்.
அவரது நிலையான ஆட்டம் மற்றும் விரைவான அசைவுகள் மூலம் எதிரிகளை விஞ்சும் திறன் ஆகியவை அவருக்கு ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. நவீனின் இளமைக் குதூகலம் அணிக்கு உற்சாகமளிக்கிறது, அதே சமயம் அவரது பணிவும், கற்கும் ஆர்வமும் அவரை மதிப்புமிக்க சொத்தாக ஆக்குகிறது. சக வீரர்களுடன் இணைவதற்கும் அணியில் உணர்வை வளர்ப்பதற்கும் அவரது இயல்பான திறன் அவரை கேப்டன் பதவிக்கான வலுவான போட்டியாளராக ஆக்குகிறது.
பவன் செராவத்
காயம் காரணமாக முந்தைய பிகேஎல் சீசனை தவறவிட்ட பவன் பவன் செராவத் தற்போது முழுமையாக குணமடைந்து குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த தயாராக உள்ளார். பவனின் சுறுசுறுப்பு, வேகம் மற்றும் அதிரடி ரைடராக இருக்கும் அக்ரோபாட்டிக் திறன்கள் பலரையும் அடிக்கடி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிகேஎல் தொடரில் 105 போட்டிகள் மற்றும் 1037 ரெய்டு புள்ளிகளுடன், அவர் லீக்கில் 5வது அதிக புள்ளிகள் பெற்ற வீரராக உள்ளார். கடினமான சூழ்நிலைகளிலும் முக்கியமான ரெய்டு புள்ளிகளைப் பெறும் திறன் அவருக்கு கேம் சேஞ்சர் என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருப்பதோடு, உறுதியான முடிவுகளை எடுக்கும் பவனுடைய திறமை அவரை இயல்பான தலைவராக்குகிறது. 26 வயதான அவர் உறுதிப்பாடு மற்றும் பின்னடைவை தொடர்ந்து வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு சிறந்த முன்மாதிரியை அமைக்கிறார். இது அவரது அணியினரை புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கும்.
சுனில் குமார்
அனுபவம் மற்றும் டிபென்சில் நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் கேப்டனாக சுனில் குமார் இருந்து வருகிறது. இதுவரை 114 ப்ரோ கபடி லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் 281 டிபென்ஸ் புள்ளிகளை பெற்றுள்ளார். அவரது தனது வலுவான டிபென்ஸ் மற்றும் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரணியினரின் ரெய்டிங் உத்திகளை தகர்க்க முடியும். அவர் கடந்த சீசனில் 64 டிபென்ஸ் அள்ளினார். ரைடர்களை விஞ்சவும் மற்றும் டிபென்சை நங்கூரமிடவும் அவரது திறனை வெளிப்படுத்தியது.
தற்காப்பை ஒருங்கிணைக்கவும், தனது அணியினருக்கு நம்பிக்கையை திறம்பட ஏற்படுத்தவும் சுனில் களத்தில் சிறந்த தகவல் தொடர்பு திறன்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவின் தற்காப்புப் படையை வழிநடத்த அவர் மிகவும் பொருத்தமானவர் மற்றும் அவரது ஒழுக்கமான அணுகுமுறை மற்றும் அசைக்க முடியாத உறுதியின் காரணமாக அணியை சிறந்த முறையில் செயல்பட ஊக்குவிக்கிறார்.