/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-24T130215.883.jpg)
மலேசியாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை தன்யதாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
ஆசியா சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் 2023 போட்டி மலேசியாவில் ஜூன் 14ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழகத்திலிருந்து 12ம் வகுப்பு மாணவி கோவை வீராங்கனை தன்யதா (17) கலந்து கொண்டார். இதில் இந்திய அணியின் 37 ரைடர்களில் ஜூனியர் தனிநபர் பிரிவில் தன்யதா பங்கேற்று 2.28.861 நிமிடத்தில் 2 கி.மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய அளவிலான டிராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இரவு விமான மூலம் கோவை வந்த வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தன்யதா கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தி.மு.க செயலாளர் சுரேஷ்குமார் - இன்ஸ்பெக்டர் பிரியம்வதா தம்பதியரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
#VIDEO || மலேசியாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை தன்யதாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.#Coimbatore | #Dhanyadha| https://t.co/gkgoZMHWlc | #AsianTrackCyclingChampionship2023 | 📹 @rahman14331pic.twitter.com/qC0nrSdzvE
— Indian Express Tamil (@IeTamil) June 24, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.