/indian-express-tamil/media/media_files/s1K2mCdNNQYSFARt0pD8.jpg)
இந்திய வீராங்கனை அவனி லெகாரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், அவர் அங்கு எடுத்த 249.6 புள்ளியை விட தற்போது 249.7 புள்ளிகள் என எடுத்து மேம்படுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Avani Lekhara wins gold, Mona Agarwal claims bronze in 10m air rifle final
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தென் கொரியா வீராங்கனை லீ யுன்ரி 246.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
இந்தப் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், அவர் அங்கு எடுத்த 249.6 புள்ளியை விட தற்போது 249.7 புள்ளிகள் என எடுத்து மேம்படுத்தினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.