Advertisment

முன்னாள் தடகள வீரர், தொழிற்சாலை உரிமையாளர்… ஆடுகளத்தை செதுக்கும் ஸ்பெஷலிஸ்ட் ரமேஷ் குமார்!

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களைத் தயாரித்தபோது குமார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

author-image
WebDesk
New Update
 BCCI pitch specialist Ramesh Kumar Tamil News

V Ramesh Kumar

தமிழ்நாட்டின் திருப்பூரில் சுமார் 1,000 பேர் பணிபுரியும் ஜவுளித் தொழிற்சாலையை நடத்தி வருகிறார் வி ரமேஷ் குமார். இந்த ஆலையில் இருந்து ஓசியானியா மற்றும் வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். மேலும், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் முன்னாள் தடகள வீரரான இவர், எம்பிஏ மற்றும் உளவியலில் எம்எஸ் பட்டமும் பெற்றுள்ளார்.

Advertisment

ஆனால், உண்மையில் வி ரமேஷ் குமார் கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது அதுவல்ல.

44 வயதான அவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) தலைமைக் கண்காணிப்பாளராகவும், சென்னையில் உள்ள சின்னமான எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆடுகளத்தின் பொறுப்பாளராகவும் உள்ளார். இப்போது அவர் ​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் ஐ.பி.எல். போட்டிக்கான தயாரிப்புகளை மேற்பார்வையிட தயாராகி வருகிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு, திருப்பூர் கிரிக்கெட் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட்டில் தனது சொந்த அகாடமியில் புல்தரை ஆடுகளத்தை உருவாக்க ஒரு கியூரேட்டரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, ​​அந்த வேலையை தொடங்கியதாக ரமேஷ் குமார் கூறுகிறார். "எனவே நான் 2016ல் பிசிசிஐ படிப்பில் (சான்றளிக்கப்பட்ட கியூரேட்டராக ஆவதற்கு) சேர்ந்தேன். இப்போது இதோ இங்கு இருக்கிறேன்," என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களைத் தயாரித்தபோது குமார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முதல்-தரப் போட்டிகளுக்கு கூட பிட்ச்களை உருவாக்குவதில் இதுவரை ஈடுபடாத ஒரு கியூரேட்டருக்கு, இது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கொடுத்த நம்பிக்கையின் பாய்ச்சல் அது என்று கூறலாம். ஆனால் இப்போது, ​​2023 நெருங்கி வருவதால், குமார் மிகவும் பிஸியான கால அட்டவணையை கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா விளையாட்டு மற்றும் ஐபிஎல் தவிர, சமநிலையான மற்றும் வடிவமைப்பிற்கு ஏற்ற பிட்ச்களை வெளியிடும் திறனைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ மேலும் பல ஆடுகள பணிகளை வரிசைப்படுத்தியுள்ளது.

அவரது கல்லூரி நாட்கள் வரை கிரிக்கெட் வீரராக இருந்த குமாரின் தீவிரமான அளவில் விளையாட்டில் நுழைவது அவரது அகாடமியில் இருந்து தொடங்கியது, இது மேற்கு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மையங்களில் ஒன்றாகும். தற்போது சுமார் 90 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

அந்த 90 மாணவர்களில் ஏறக்குறைய பாதி பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது மற்றும் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களையும் அகாடமி கவனித்துக் கொள்கிறது. அகாடமியைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள், வயதுப் பிரிவுகளில் தமிழ்நாட்டு அணியின் ஒரு பகுதியாக உள்ளனர். இவர்களில் ஒரு சில குழந்தைகளின் வேலையில்லாத பெற்றோருக்கும் குமார் வேலை கொடுத்துள்ளார்.

அந்த ஆரம்ப வருடங்கள் அவரது அகாடமியில் மட்டுமே இருந்தபோதிலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதலில் திருப்பூரில் ஒரு சில வயது பிரிவு போட்டிகளில் உதவ அவரை அணுகியது என்கிறார் குமார். அந்த ஆடுகளங்கள் அடுத்தடுத்த சீசன்களில் ஈர்க்கக்கூடிய கருத்துக்களைப் பெற்றதால், மாநில சங்கம் அவரை எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தலைமைக் கண்காணிப்பாளராக நியமிக்க நகர்ந்தது. ஆனால், குமாருக்கு ஒரு நிபந்தனை இருந்தது: அவர் தனது சேவைகளை இலவசமாக வழங்குவார்.

"குறைந்த கட்டணத்தையாவது வசூலிக்க வேண்டும் என்று அவரை நம்ப வைக்க நாங்கள் கடுமையாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அவர் ஒரு பைசா கூட வாங்காமல் இருக்கிறார்” என்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர் ஐ பழனி.

ரமேஷ் கூறுகையில், நான் பணம் சம்பாதிக்க வரவில்லை. ஆர்வத்தைப் பின்பற்றுவதற்கு யார் கட்டணம் வசூலிப்பார்கள்?"

சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் கிரிக்கெட் சங்கம் புதிய மைதானங்களை உருவாக்கி வருகிறது. இதேபோல், திருச்சியில் மற்றொரு மைதானமும் வரவிருப்பதால், குமார் தனது வணிகத்தை நடத்தும் பொறுப்பை தனது மனைவி மலர்விழி கிரியிடம் ஒப்படைத்துள்ளார்.

முன்பு மலர்விழி தனது மூன்று வயது மகளை கவனித்துக்கொள்வதைத் தவிர, வீட்டில் இருக்கும்போது மட்டுமே உதவிகளை வழங்கி வந்தார். தற்போது அவர் தனியாக வியாபாரத்தை நடத்துகிறார் என்று குமார் கூறுகிறார். “அதை என் மனைவியிடம் விட்டுவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அவரது ஊக்கம் மற்றும் ஆதரவினால்தான் என்னால் இதைச் செய்ய முடிகிறது,” என்கிறார்.

செவ்வாயன்று, கோயம்புத்தூரில் உள்ள SNR கல்லூரி மைதானத்தில், குமாரின் திறமைகள் தெளிவாகத் தெரிந்தன, தமிழ்நாடுக்கு எதிரான ரஞ்சி டிராபி இரண்டாவது சுற்று ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் ஆந்திரா 277/5 ரன்களை எடுத்தது, ஆடுகளம் நல்ல மற்றும் நிலையான பவுன்ஸ் வழங்கியது.

"அனைவருக்கும் எல்லாவற்றையும் கொண்ட ஒரு ஆடுகளத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். (நன்கு அறியப்பட்ட கியூரேட்டர்கள்) ஆஷிஷ் பௌமிக் (வங்காளம்), தபஸ் சாட்டர்ஜி (ராஜஸ்தான்), சுனில் சவுகான் (இமாச்சல்), தல்ஜித் சிங் (பஞ்சாப்), பி ஆர் விஸ்வநாத் (தமிழ்நாடு) மற்றும் பிரசாந்த் (கர்நாடகா) ஆகியோரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான். 2016 ஆம் ஆண்டு நான் பாடத்திட்டத்தில் படித்தபோது நான் இளையவனாக இருந்ததால் இவர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர்,” என்கிறார் குமார்.

கடந்த சில ஆண்டுகளாக, குமார் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் போதெல்லாம், அங்குள்ள சில மைதானங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். "நான் இங்கிலாந்தில் இருக்கும் போது, ​​சில கவுண்டி மைதானத்தில் ஆடுகளங்களை உருவாக்கும்போது அவர்களுடன் இருக்க அனுமதி பெற்றேன். நான் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, ​​பெர்த் ஏன் அங்கு நிறைய பவுன்ஸ் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளச் சென்றேன், ”என்று அவர் கூறுகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துலீப் டிராபியை கோயம்புத்தூர் நடத்தியபோது, ​​அவர் தயாரித்த ஆடுகளங்கள், மேற்கு மண்டலத்தின் தலைவராக இருந்த முன்னாள் இந்திய நட்சத்திரமான அஜிங்க்யா ரஹானேவிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றன. ஆனால் குமாருக்கு, 2021ல் இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் அவர் செய்த பிட்ச்சுகளுக்கு இந்திய அணியில் இருந்து மிகப்பெரிய பாரட்டு கிடைத்தது.

"இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே மூன்று நாள் இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே இரண்டாவது போட்டிக்கு தயாராக சிறிது நேரம் இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் போது வெயிலுக்கு அடியில் இருந்தது. இறுதியில் அனைவரும் அதை விரும்பினர். விராட் கோலி, ஆர் அஷ்வின், ரோஹித் சர்மா, ரவி சாஸ்திரி என அனைவரும் ஒரு தொப்பியில் கையெழுத்திட்டு அனுப்பினார்கள். பயோ-பபிள் நெறிமுறைகள் காரணமாக, என்னால் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. இது அவர்களுக்கு அற்புதமாக இருந்தது. ” என்று குமார் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai Sports Cricket Indian Cricket Team Bcci Tamilnadu Cricket Association
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment