IND Vs BAN: தொடரை இழந்த இந்தியா… ட்ராவிட், ரோகித், கோலியுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ முடிவு

வங்கதேசத்துடனான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.

BCCI to hold review meeting after Team Ind’s loss to Ban Tamil News
Bangladesh's Mushfiqur Rahim walks back after his dismissal during the second one day international cricket match between Bangladesh and India in Dhaka, Bangladesh, Wednesday, Dec. 7, 2022. (AP Photo/Surjeet Yadav)

News about IND, BCCI and Bangladesh in tamil: வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 05) நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதிய 2வது ஒருநாள் ஆட்டம் நேற்று (புதன்கிழமை) டாக்கா மைதானத்தில் பகல் 11:30 மணிக்கு தொடங்கி நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் மஹ்முதுல்லா (77) – மெஹிதி ஹசன் மிராஸ் (100) நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தால் 271 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. இந்த த்ரில் வெற்றியின் மூலம் வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும், தொடரையும் கைப்பற்றியுள்ளது.

வங்கதேச தோல்வி எதிரொலி: ட்ராவிட், ரோகித், கோலியுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ முடிவு

இந்நிலையில், வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.

வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருந்து அணி திரும்பியதும், பிசிசிஐயின் நிர்வாகிகள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண், கேப்டன் ரோகித் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோரை சந்திப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த இருந்தது. ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் சிலர் பிஸியாக இருந்தனர். தற்போது மிர்பூரில் ஏழாவது இடத்தில் உள்ள வங்கதேசத்திடம் இரண்டு தோல்விகள் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் நடத்தப்பட உள்ளதால் பிசிசிஐ அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு இந்தியா பெரிய ஐசிசி பட்டத்தை வெல்லவில்லை.

“பங்களாதேஷ் செல்வதற்கு முன்பு இந்திய அணியைச் சந்திக்க முடியவில்லை. ஏனெனில், சில அலுவலகப் பணியாளர்கள் பிஸியாக இருந்தனர். ஆனால் அணி வங்காளதேசத்திலிருந்து திரும்பியவுடன் நாங்கள் அதைத் திட்டமிடுவோம். இது ஒரு சங்கடமான செயல்பாடாகும், மேலும் இந்த அணி வங்காளதேசத்திடம் தோற்றுவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ”என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்க வாய்ப்புள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித்துக்கு பிசிசிஐ எந்தளவுக்கு நீண்ட ஆதரவு கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரோகித்துக்கு 35 வயதாகிறது. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு அவரை கேப்டனாகத் தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ விரும்பலாம். மேலும் 2024ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து பாண்டியா வளர்க்கப்படுகிறார். எவ்வாறாயினும், மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றவுடன் கேப்டன் பதவி குறித்த எதிர்கால வரைபடம் தெளிவாகத் தெரியும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது, ​​ஒரு வருடம் திட்டமிடப்பட்டாலும் இந்திய அணி டி20க்குத் தயாராகவில்லை.

நிலையான தொடக்க ஆட்டக்காரர்கள், திறமையான ஃபினிஷர் இல்லாமை, பந்துவீச்சு வரிசையில் எக்ஸ்பிரஸ் வேகம் இல்லை, மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் உள்ளிட்ட பல பலவீனங்களால் டவுன் அண்டர் விளையாடிய அணி பாதிக்கப்பட்டது. இது பெரும்பாலும் டி20 வடிவத்தில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்த சூர்யகுமார் யாதவின் பெரிய வெற்றியாகும். அவர் இந்தியாவின் ப்ளஷ்ஸைக் காப்பாற்றினார்.

சேத்தன் ஷர்மா, சுனில் ஜோஷி, தேபாஷிஷ் மொஹந்தி மற்றும் ஹர்விந்தர் சிங் ஆகியோரின் பதவிக்காலத்தை புதுப்பிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள பிசிசிஐ இன்னும் புதிய மூத்த தேர்வுக் குழுவை நியமிக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Bcci to hold review meeting after team inds loss to ban tamil news

Exit mobile version