11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் வியாழக்கிமை (அக்.23) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - உ.பி யோதாஸ் அணிகள் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெங்கால் வாரியர்ஸ் - உ.பி யோதாஸ் அணிகள் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றன. ஆட்ட நேர முடிவில், பெங்கால் வாரியஸ் அணி 32 புள்ளிகளும், உ.பி யோத்தாஸ் 29 புள்ளிகளும் எடுத்தன. இதன் மூலம், உ.பி யோத்தாஸை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
அக்டோபர் 20 அன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 34-39 என்ற கணக்கில் பெற்ற தோல்விக்குப் பிறகு பெங்கால் வாரியர்ஸ் இந்த போட்டியில் களமாடுகிறது. மறுபுறம், அக்டோபர் 22 அன்று நடந்த ஆட்டத்தில் உபி யோதாஸ் 57-36 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்திய உத்வேகத்தில் ஆட உள்ளது. வெற்றி களிப்பில் களமிறங்கும் உபி யோதாஸை பெங்கால் வாரியர்ஸ் சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில் பெங்கால் வாரியர்ஸ் 14 முறை உ.பி யோதாஸை எதிர்கொண்டுள்ளது. இதில் பெங்கால் வாரியர்ஸ் 5 முறையும், உ.பி யோதாஸ் 4 முறையும் வென்றுள்ளன. 5 போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன. இன்றைய போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 42-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“