சென்னையில் ஐ.பி.எல் போட்டி: நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சி.எஸ்.கே- குஜராத் டைட்டன்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி ரசிகர்கள் மற்றும் பயனர்களின் வசதிக்காக நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சி.எஸ்.கே- குஜராத் டைட்டன்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி ரசிகர்கள் மற்றும் பயனர்களின் வசதிக்காக நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai,Metro
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

17-வது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. 

Advertisment

இந்த ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மெட்ரோ நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளளது. 

போட்டி முடிந்து ரசிகர்கள் வீடு திரும்ப ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன்லைனில் (சி.எம்.ஆர்.எல், மொபைல் ஆப், பேடி எம் ஆப், போன் பே, வாட்ஸ்அப்) மூலம் பயணச் சீட்டு பெறலாம் அல்லது மெட்ரோ கவுண்டர்களில் ரயில் பயணச் சீட்டு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு  சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.  

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai Metro

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: