Chess Olympiad Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.
4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை
வருகின்ற வியாழக்கிழமை (ஜூலை 28) செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மிகச்சிறப்பான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை சதுரங்க பலகைப் போல வர்ணம் பூசியது, இசை ஜாம்பவானான ஏ.ஆர்.ரகுமான் இப்போட்டிக்காக பிரத்யேகமாக பாடல் இசையமைப்பது, சென்னை முழுவதும் ‘தம்பி’ (செஸ் ஒலிம்பியாடின் இலச்சி உருவப்படம்) சிலையாகவும், பதாகையாகவும் விளம்பரப்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களைப் பரப்புவது போன்ற பல்வேறு வகையில் மக்களின் முன் இப்போட்டியை கொண்டு சேர்க்கின்றனர்.
‘Thambi’ family welcomes all the chess players across the globe to Chennai for #44fidechessolympiad @chennaichess22 @aicfchess @FIDE_chess pic.twitter.com/uEfwTek2Og
— Dr V P Jeyaseelan (@jeyaseelan_vp) July 26, 2022
அந்த வகையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதத்தில், ‘தம்பி’ உருவப்படம் மற்றும் செஸ் போர்டு படங்களை அச்சடித்துள்ளனர். ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
When your morning milk is delivered like this …. @AavinTN
— Viswanathan Anand (@vishy64theking) July 26, 2022
@CMOTamilnadu @FIDE_chess @aicfchess #chennaichess2022
VanakamChessChennai pic.twitter.com/Rh0dG2K8cW
44th Chess Olympiad 🔥#ChessChennai2022 #ChessOlympiad@chennaichess22 #NammaChennaiNammaChess pic.twitter.com/8gGsugR9wV
— SELVASINGH (@SELVASINGH2) July 26, 2022
தமிழகம் வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னதாக, முதல் தடவையாக நடைபெறும் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 19 ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜோதி 26 மாநிலங்கள் மற்றும் 75 நகரங்கள் வழியாக பயணித்து நேற்று திங்களன்று புதுச்சேரி வழியாக தமிழகம் வந்தடைந்தது. இந்த ஜோதி முதலில் கோவை நகருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று மாலை மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நம்ம செஸ்
— OSD Photography (@osdphotography) July 26, 2022
மதுரை மாஸ்
44th Chess Olympiad 2022
Torch Relay
Madurai 2022
Capture By: OSD Photography & Team
–
–
–#chessolympiad #chess #chessboard #osdphotography #chessolympiad2022#chessgame #challenge #GamingNews pic.twitter.com/HcQdI0TkyH
கோவையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் கொடிசியாவில் பெற்றுக்கொண்டனர்.

2000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “இந்தியாவிலேயே முதல்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாநிலம் நடத்துவதில் பெருமை கொள்கிறது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் (பொதுத்துறை நிறுவனங்களில்) 3% விளையாட்டு ஒதுக்கீட்டு ஆட்சேர்ப்புக்கு சேர்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக ‘சிலம்பம்’ எனப் பெயரிட உத்தரவு பிறப்பித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
அமைச்சர் முத்துசாமி கூறுகையில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் வகையில், மம்மல்லபுரத்தில் 76,000 சதுர அடி பரப்பளவுள்ள மைதானத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 708 சதுரங்க பலகைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவதை ஊக்குவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, இதன் விளைவாக மாநிலம் 73 செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது.” என்று தெரிவித்தார்.
பாஜக வெளிநடப்பு
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அமைச்சர்களும், ஆட்சியர்களும் குறிப்பிடத் தவறியதாகக் கூறி, விழாவிலிருந்து மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய அவர்கள், தமிழர் பண்பாட்டின் பெருமையை வெளிக்கொணரும் வகையில், மாமல்லபுரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு பிரதமர் மோடி முயற்சி எடுத்துள்ளார் என்று தெரிவித்தனர்.
CBE #BJP functionaries walkout from the Chess Olympiad Torch rally event as the event organisers and TN Min didn't cite or use PM Modi's name in their speech during the event.
— Mugilan Chandrakumar (@Mugilan__C) July 25, 2022
More than 10 BJP functionaries who were seated in the front row walked out. @News18TamilNadu pic.twitter.com/uQ0WAX1HL0
பிரதமர் மோடி சென்னை வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிக்கான தொடக்க விழா ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குஜராத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி. குழுவைச் சேர்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்து உள்ளனா். இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டா் தரை இறங்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
வெளிநாட்டு வீரர்கள் வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்ந்து 4-வது நாளாக சென்னை வந்தடைந்தனர். இதில் தென்ஆப்பிரிக்கா, உருகுவே, நைஜீரியா, டோகோ, ஹாங்காங், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, தென் கொரியா, அமெரிக்கா, ரோமானியா மற்றும் பார்படாஸ்ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்று தங்கும் இடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். முன்னதாக வீரர்கள் விமான நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தின் (தம்பி) முன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Team Aruba 🇦🇼 lands in India for the 44th #ChessOlympiad ✅🤩
— SAI Media (@Media_SAI) July 25, 2022
📍 Delhi Airport 🛩#India4ChessOlympiad #ChessChennai2022 pic.twitter.com/BYbGpQSEmb
SINGHAMS ON BOARD 🦁♟️
— Manikandan Natarajan🇮🇳 (@Manikan24713299) July 26, 2022
Officers of @tnpoliceoffl enjoyed a game of chess at the venue of the 44th #ChessOlympiad 😍📸
The #chess fever is for real 🔥#OlympiadFlame | #India4ChessOlympiad | @FIDE_chess | @DrSK_AICF | @Bharatchess64 @annamalai_k @TnbjpthinkersCL pic.twitter.com/I0COUf0zwu
We welcome the teams from Trinidad & Tobago 🇹🇹 and Aruba🇦🇼 to India for the 44th FIDE #ChessOlympiad 🙂
— SAI Media (@Media_SAI) July 25, 2022
Namaste, Welcome to 🇮🇳 🙏#India4ChessOlympiad #ChessChennai2022 @PMOIndia @ianuragthakur @NisithPramanik @YASMinistry @FIDE_chess @aicfchess @DDNewslive @pibchennai pic.twitter.com/qg2WQfl1Fv
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?
இந்தியாவில் உள்ள ஆர்வமுள்ள செஸ் ரசிகர்கள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டுகளை அகில இந்திய செஸ் கூட்டமைப்பால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வின் அதிகாரப்பூர்வ டிக்கெட் போர்ட்டலில் பதிவு செய்யலாம்.
டிக்கெட்டுகளை வாங்க, ரசிகர்கள் டிக்கெட் போர்ட்டல், tickets.aicf.in ஐப் பார்வையிட வேண்டும் மற்றும் அவர்களுக்குக் காட்டப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பிறகு, ரசிகர்கள் வாட்ஸ்அப்/மின்னஞ்சல்/எஸ்எம்எஸ் மூலம் அதைப் பற்றிய உறுதிப்படுத்தலைப் பெறுவார்கள்.
First look at the 44th Chess Olympiad hall#Chess #ChessBaseIndia #ChessOlympiad pic.twitter.com/LLHgwwnPAz
— ChessBase India (@ChessbaseIndia) July 24, 2022
டிக்கெட் விலைகள் – வகை 1
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.200 இல் இருந்து தொடங்குகிறது. 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும். வகை 1 டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஹால் 1 மற்றும் 2 க்கு செல்லலாம். அதே நேரத்தில், டிக்கெட் இரண்டு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.
வகை 2
வகை 2 இன் கீழ், வகை 1 தவிர்த்து இந்திய குடிமக்கள் குறைந்தபட்ச விலை ரூ.2000 மற்றும் அதிகபட்சம் ரூ. 3000 க்கு டிக்கெட்டுகளை வாங்க முடியும். இது அவர்களுக்கு ஹால் 1 மற்றும் 2 க்கு அணுகலை வழங்கும். மேலும் இது முழு நாள் நிகழ்வுக்கான அணுகலாகவும் இருக்கும்.
வகை 3
மூன்றாவது வகையின் கீழ், ஹால் 1 மற்றும் 2 க்குள் நுழைவதற்கு வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகள் வெளிநாட்டினருக்கு மட்டுமே கிடைக்கும். அவர்கள் நிகழ்வுகளின் நாள் முழுவதும் அணுகலாம். வகை 3க்கான ஆரம்ப விலை ரூ.6000 மற்றும் ரூ.8000 வரை உயரும்.
ஹால் 1க்கான விலைகள் ஹால் 2 ஐ விட அதிகமாக உள்ளது. ஏனெனில் ஹால் 1 முதல் தரவரிசை அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகளைக் கொண்டிருக்கும். ஹால் 1ல் திறந்த நிலையில் 28 பலகைகளும், பெண்கள் பிரிவில் 21 பலகைகளும் இடம்பெறும். அதே நேரத்தில், மீதமுள்ள பலகைகள் ஹால் 2 இல் உள்ளன.
Number of Chess Grandmasters produced State-wise list 👇#ChessOlympiad #chess #grandmasters pic.twitter.com/oG9Mwo8f4O
— Induja Ragunathan (@R_Induja) July 23, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil