விளையாட்டு என்றால் என்ன? கோவை காவல் ஆணையர் விளக்கம்

குழந்தைகள் மொபைலில் விளையாடுவதை விட, மண்ணுடன் கலந்துள்ள மைதானத்தில் விளையாடினால், அவர்களின் எதிர்காலம் இயற்கை சூழலில் நல்லதொரு பாதையாக அமையும் என கோவை மாநகர பாலகிருஷ்ணன் கூறினார்.

குழந்தைகள் மொபைலில் விளையாடுவதை விட, மண்ணுடன் கலந்துள்ள மைதானத்தில் விளையாடினால், அவர்களின் எதிர்காலம் இயற்கை சூழலில் நல்லதொரு பாதையாக அமையும் என கோவை மாநகர பாலகிருஷ்ணன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Coimbatore city Police Commissioner Balakrishnan on sports Tamil News

கடந்த ஐந்து ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி, விளையாட்டு என்றால் என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் கோவை பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் வெற்றி பெற்று சாதனை புரிந்த வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் இந்திய அளவில் முதலிடங்களை பெற்ற 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கி கவுரவித்தார்.

விருது நிகழ்வினை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், "குழந்தைகள் மத்தியில் விளையாட்டு போட்டிகள் என்பது மிக ஆரோக்கியமானது. அது மனதையும் உடலையும் தினம் தினம் ஊக்குவிக்கும். இது போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால், குழந்தைகள் மனதை சீர்குலைக்கும் எந்த ஒரு செயல்களிலும் பாதை மாறி அமையாதவாறு புதியதோர் மனவலிமை உடைய பாதையை ஏற்படுத்தும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேரங்களை விளையாட்டில் கழித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: