கொரோனா அச்சுறுத்தல் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க, சினிமா, விளையாட்டு, அரசியல் என உலகின் அத்தனை துறைகளும் ஆஃப் மோடுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. யாரிடம் கைக் கொடுப்பது, யாரை கட்டியணைப்பது, யாரிடம் பேசுவது என்றே தெரியாமல், தலைவன் வடிவேலு காமெடியில் வருவது போல், யாரை பார்த்தாலும் ஓடி ஒளிந்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே நல்ல வேலையில்லாமல் பல பேர் ஹோட்டலுக்கும், மால்களுக்கும் வேலைக்கு சென்றுக் கொண்டிருக்க, இப்போது கொரோனா பீதி காரணமாக அனைத்தும் மூடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கொரோனாவும் விளையாட்டு உலகமும்
முன்பு சாப்பிட்டால் கூட கைக் கழுவாத சிலர் கூட இப்போது, மணிக்கு நான்கு முறை கைக் கழுவிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு அமளி துமளியிலும் எதுப்பற்றியும் கவலை கொள்ளாத தோனி, வழக்கம் தனது 'போனா போகட்டும் போடா' மோடில் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, 'தல கவனமா இரு தல' அவரது ரசிகர்களை ட்வீட் போட வைத்திருக்கிறது.
ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பிய தோனி, அங்கு பைக் ரைடிலும், பேட்மிண்டன் விளையாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கொஞ்சம் உஷாரா இருங்க பாஸ்....
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”