பெண்கள் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
மெல்பர்னில் இன்று நடைபெற்ற மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு திணறியது. இறுதியில் 19.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா தோல்வியடைந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இந்திய வீராங்கனைகள் நம்பிக்கையுடன் உள்ளனர். 9 சிக்சருடன் மொத்தம் 161 ரன்கள் (29, 39, 46, 47 ரன்) சேர்த்துள்ள ஷபாலியின் அதிரடியைத் தான் இந்தியா அதிகமாக சார்ந்து இருக்கிறது. மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா ஓரளவு நல்ல நிலையில் உள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் (4 ஆட்டத்தில் 26 ரன்) தடுமாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவரும் ஜொலித்தால் பேட்டிங் வரிசை மேலும் பலப்படும். இன்று ஹர்மன்பிரீத் கவுருக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியாகும். லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றிகளை வாரி குவித்த இந்திய அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை சந்திக்க இருந்தது. அந்த ஆட்டம் மழையால் ரத்தானதால் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த வகையில் இந்திய அணி முதல் முறையாக இறுதிசுற்றை எட்டியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights