/tamil-ie/media/media_files/uploads/2021/04/ipl-2021-6-1.jpg)
Cricket news in tamil: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வலது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டது. எனவே இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்து விலகி இருந்தார். ஐபிஎல் தொடரிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவரை இந்தாண்டு நடைபெறும் தொடரில் களமிறங்குவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்ட்டது.
இந்த நிலையில், நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) உறுதிப்படுத்தியுள்ளது.
An update on @Jofraarcher's fitness 👇
— England Cricket (@englandcricket) April 23, 2021
"ஆர்ச்சர் இந்த வாரம் அதிக தீவிரத்துடன் பந்துவீச்சுக்கு திரும்பினார். மேலும் ஈசிபி மற்றும் சசெக்ஸ் மருத்துவ அணிகள் அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். ஆர்ச்சர் இப்போது அடுத்த வாரம் தொடங்கி தனது பயிற்சி ஆட்சியை முடுக்கிவிடுவார், மேலும் சசெக்ஸுடன் முழு பயிற்சியில் ஈடுபடுவார் ”என்று ஈசிபி தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.