Indian cricket team head coach Rahul Dravid and captain Rohit Sharma inspect the pitch during a practice session ahead of the 3rd test cricket match between India and Australia, at Holkar Cricket Stadium in Indore, Monday, Feb. 27, 2023. (PTI)
India vs Australia 3rd Test: இந்தியாவில் மாறிவரும் மக்கள்தொகை புள்ளி விபரம் போல மைதானங்களில் உள்ள பிட்ச்-களும் மாறிய வண்ணம் உள்ளன. சிவப்பு மண் பிட்ச் (ஆடுகளம்) பெரும்பாலும் தென்னிந்திய மைதானங்களில் ஆதிக்கம் செலுத்தினால், வடக்கில் கருப்பு மண் விரும்பத்தக்க ஒன்றாக உள்ளது. அதே மேற்கில் பவுன்ஸ் ஒரு காரணியாக இருந்தாலும், கிழக்குப் பகுதிகளில் தாழ்வான மேற்பரப்புகள் (பந்துகள் குத்தி குறைவான தூரத்துக்கு எழும்புவது) பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடும். அந்த வகையில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆடுகளங்களைப் பற்றி இங்கு விளக்குகியுள்ளோம்.
Advertisment
சிவப்பு மண்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் (சேப்பாக்கம்), பெங்களூரு எம்.சின்னசாமி மற்றும் மும்பை வான்கடே ஆகியவற்றில் ஒரு பிரதான ஆடுகளங்களாக சிவப்பு மண் உள்ளன. இதில் தேய்மானம் ஏற்பட ஆரம்பித்ததும், ஐந்து நாட்களும் டெஸ்ட் நீடித்தால், அது ஃபுல் லெந்த் பகுதியைச் சுற்றி ஏராளமான கரடுமுரடான திட்டுகளுடன் கூடிய, பாரிஸில் இருக்கும் சிவப்பு மண் டென்னிஸ் ஆடுகள (ரோலண்ட் கரோஸ் ஆடுகளம்) மேற்பரப்பைப் போலவே முடிவடையும். சிவப்பு மண்ணின் ஆடுகளங்களில் பொதுவாக அதிக பவுன்ஸ் இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதை ரசித்து வீசுவார்கள். மேலும், அடிக்கடி விக்கெட்டுகளை கைப்பற்றியும், நெருக்கடி கொடுத்ததும் வருவார்கள். ஆடுகளத்தில் போதுமான அளவு தண்ணீர் பாய்ச்சப்படாவிட்டால், சிவப்பு மண் ஆடுகளங்கள் வேகமாக நொறுங்கி, பேட்ஸ்மேன்களுக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க மிகவும் சவாலானதாக இருக்கும்.
கருப்பு மண்
Advertisment
Advertisements
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா, பஞ்சாப் மொஹாலி மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானங்களில் கறுப்பு மண் ஆடுகளங்கள் உள்ளன, இங்கு களிமண் பயன்படுத்தப்படுவதால் பவுன்ஸ் குறைவாக இருக்கும். தண்ணீர் பாய்ச்சப்படும் போது, அது மேற்பரப்பை நீண்ட நேரம் ஒன்றாக வைத்திருக்கும் மற்றும் பேட்ஸ்மேன்கள் பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் விளையாட மகிழ்ச்சியடைவார்கள். போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு, கியூரேட்டர்கள் பெரும்பாலும் அதில் இருக்கும் சிறிய புல்லை விட்டுவிடுவார்கள் அல்லது ஒரு டெஸ்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். இந்த ஆடுகளங்கள் மாறாத பவுன்ஸ் கூட கொடுக்கலாம். இதுபோன்ற ஆடுகளங்களில் இரண்டாவது செஷனிலும் பந்து பழையதாகும்போதும் பேட்டிங் செய்வது எளிதாகிவிடும். மேலும் கருப்பு மண் ஆடுகளங்கள் வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமாக செயல்படும். உதாரணமாக வங்கதேசத்தில் உள்ள கறுப்பு மண் ஆடுகளங்கள் இந்தியாவில் உள்ளதை விட மெதுவாக உள்ளன. ஏனெனில், அங்கு குறைந்த நீர் கொடுக்கப்படுகிறது.
Indore: Australian cricketer Steve Smith inspects the pitch during a practice session ahead of the 3rd test cricket match between India and Australia, at Holkar Cricket Stadium in Indore, Monday, Feb. 27, 2023. (PTI)
இந்தூரில் என்ன ஆடுகளம் இருக்கிறது?
இங்கே இது சுவாரஸ்யமானது. கியூரேட்டர்கள் கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பதோடு, ஒரு விவசாயி தனது விவசாயத்தை எப்படி நடத்துகிறாரோ அதைப் போலவே ஸ்கொயரை அடிக்கடி நடத்துகிறார்கள். இந்த சோதனையின் போது என்ன வகையான பொருட்கள் கலக்கப்படுகின்றன மற்றும் அது என்ன வழங்குகிறது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இது ஒரு ரகசிய செய்முறையாகும், எதிரணிகள் அதைக் கண்டுபிடிக்க திணறுவார்கள். நேற்று திங்களன்று என்ன வகையான பிட்ச் இருந்தது என்பது கலவையான உணர்வுகள். சிலர் ஆடுகளத்தில் உள்ள சிவப்புத் திட்டுகளை மேற்கோள் காட்டி இது சிவப்பு மண் ஆடுகளம் என்று கூறினார்கள். ஆடுகளத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற மற்றவர்கள் அது கருப்பாக இருக்கிறது என்றார்கள். ஆனால், அங்கு இருப்பது சிவப்பு மற்றும் கருப்பு மண்ணின் கலவையாகும்.
அதற்கு என்ன பொருள்? இது வழக்கமான ஒன்றா?
இது வாடிக்கையான ஒன்றுதான். இது இந்தியாவிற்கு என பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்டது அல்ல. மைதான ஊழியர்கள் இரண்டின் கலவையை விரும்புகிறார்கள். ஏனெனில் கோடைகாலம் தொடங்குவதால், கருப்பு மண் ஆடுகளத்தை நீண்ட நேரத்திற்கு ஒன்றாக வைத்திருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். நேற்று ஆடுகளம் நீர் பாய்ச்சப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளும் உள்ளன. அதாவது அது சிவப்பு மண் ஆடுகளத்தைப் போல விரைவாக நொறுங்காது.
“அது சிவப்பு மண்ணா, கருமண்ணா, ஊதா மண்ணா இருந்தாலும் பரவாயில்லை. ஒரு பிட்சை உருவாக்குவது இந்த அனைத்து பொருட்களின் கலவையாகும். சிவப்பு மண், சூரிய ஒளியில் இருப்பதால், விரைவாக உடைந்து விடும். அதை அப்படியே வைத்திருக்க ஏதாவது தேவை என்று நாங்கள் உணர்ந்தால் கருப்பு மண்ணை பயன்படுத்தி இருக்கிறோம். அதை அவற்றால் வழங்க முடியும் என்று நம்புகிறோம்.
மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மேல் அடுக்கு (இந்தூரில் மேல் அடுக்கு சிவப்பு மண்) அப்படியே இருக்கும் வரை பவுன்ஸ் இருக்கும், அது போனவுடன், தேய்மானம் தொடங்கும்" என்று ஆடுகளத்தின் வளர்ச்சியை நன்கு அறிந்த கண்காணிப்பாளர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil