/tamil-ie/media/media_files/uploads/2023/01/tamil-indian-express-44.jpg)
Jasprit Bumrah bowls during a warm-up match. (Twitter/BCCI)
Jasprit Bumrah, Indian cricket team tamil news: ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இந்திய கிரிக்கெட் தேர்ந்தெடுத்துள்ள பாதை ஏதோ ஒரு ஆர்வத்தை வெளிக்காட்டுகிறது. முதுகில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக பல மாதங்கள் மறுவாழ்வுக்காக சென்ற பும்ரா இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்படி அவரை சேர்த்துள்ளது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மார்க்யூ டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆயத்த ஓட்டமாக இருக்கலாம். ஏனென்றால், இந்த டெஸ்ட் தொடரில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும்.

ஆனால், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கு கூட, அவர் சேர்க்கப்படுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதும், அவர் அணியில் ஒரு பகுதியாக இருந்தாலும், அணி நிர்வாகம் அவரை ஒரு போட்டியில் மட்டுமே சேர்ப்பது (போட்டி அடிப்படையில்) குறித்து அழைப்பு விடுக்கும் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை, எல்லாம் சரியாக நடந்தால், அவர் ஓரிரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடலாம். பிறகு, இருதரப்பு ஒருநாள் தொடரில் அவரை களமிறக்குவதில் என்ன அவசரம்?
கடந்தாண்டு இறுதியில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்கு வேகப்புயலான பும்ராவை இந்தியா பயன்படுத்த முயற்சி செய்தது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்படவே, அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்த தவறை அப்போதைய இந்திய தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா கூட ஒப்புக்கொண்டார். "நாங்கள் ஜஸ்பிரித் பும்ராவை விரைவுபடுத்த முயற்சித்தோம், உலகக் கோப்பை வரும்போது அவரைப் விளையாட வைக்க முயற்சித்தோம். என்ன நடந்தது என்று பாருங்கள்? உலகக் கோப்பைக்கு நாங்கள் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ”என்றும் ,யாரோ தன்னை வலுக்கட்டாயமாக தேர்வு செய்ய சொன்னது போல் அவர் கூறினார். அதற்குப் பிறகு அவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த இலங்கை தொடரில் எந்த வெயிட்டேஜும் இல்லை என்பதால், முக்கியமான போட்டிகளுக்கு அவரைத் தக்கவைத்துக்கொள்வது மற்றும் அனைத்து கவலைகளையும் குணப்படுத்த அவருக்கு அதிக நேரம் கொடுப்பது அவர்களின் ஆரம்ப திட்டமாக இருந்தது. ஐபிஎல்லில் வீரர்களைக் கண்காணிப்பதாக பிசிசிஐ கூறியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் பும்ராவைப் பற்றி அவர்கள் எப்படி கண்காணிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
விஷயங்களை அறிந்தவர்களின் கூற்றுப்படி, இலங்கை தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்வாளர்கள் சந்தித்தபோது பும்ரா ஏற்கனவே உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் அவர்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை, அது பெரிதாக புருவத்தை உயர்த்தவில்லை. ஆனால் கடந்த வாரம், இலங்கைக்கு எதிரான டி 20 போட்டிகள் தொடங்கியவுடன், பிசிசிஐ நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு பும்ராவைச் சேர்த்துள்ளது.
மற்ற அணிகளை விட பும்ரா உலகக் கோப்பையில் மிகவும் தேவைப்படுகிறார் என்பது இந்தியாவின் சிந்தனைக் குழுவுக்கும் தெரியும். உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஒரு பெரிய போட்டியாக இருந்தாலும், இந்தியா சொந்த மண்ணில் விளையாடும் சூழலை நம்புகிறது, அவர்களைப் பாராட்டும் வகையில் சுழற்பந்து வீச்சாளர்களான ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோருடன் முகம்மது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருடன் தகுதிபெறுவதற்கான வெற்றியை எட்ட முடியும். பும்ரா டெஸ்ட்டில் விளையாடவில்லை என்றால், உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஏனெனில் அவர் நிச்சயமாக தனது வேகத்தை கொண்டு மிரட்ட முடியும்.

2023 உலகக் கோப்பைக்கு இலக்கு வைக்கப்பட்ட இந்திய வீரர்களைக் கண்காணிக்க முடிவு செய்த பிசிசிஐயின் மறுஆய்வுக் கூட்டத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு பும்ராவை ஒருநாள் போட்டிகளில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வந்தது. சொந்த மண்ணில் உலகக் கோப்பைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பும்ராவை மிகவும் கவனமாக நிர்வகிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு மற்ற எந்த ஃபார்மெட்டை யும் விட அதிக ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடுவார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் அல்லது நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகள் பெரிய விஷயங்களில் இந்தியாவுக்குப் பொருத்தமற்றவை. அவர்களுக்கு ஒரு முக்கியமான பார்டர்-கவாஸ்கர் தொடர் வரவுள்ளது. ஏற்கனவே ரிஷப் பண்ட் இல்லாத அணிக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பும்ரா தேவை. மேலும் அவர் அவர்களின் எக்ஸ் ஃபேக்டராக இருப்பார். பும்ராவைப் போன்ற வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்கு வரலாற்றில் இருந்ததில்லை. ஆனால் அவரது உடற்தகுதி, அவர்களின் கவலைகள் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை உள்நாட்டில் பெரிதாக இருப்பதால், அவர்கள் பும்ராவை ஒருநாள் மெகா போட்டிக்காக தயார்படுத்த முயற்சிக்கின்றனர்.

அப்படியானால், அவரை இலங்கை தொடருக்கு பணயம் வைக்க வேண்டுமா அல்லது ஐபிஎல் வரை காத்திருக்க வேண்டுமா? அவரை இலங்கை தொடரில் விளையாட சேர்க்க வேண்டும் என்ற அழைப்பு, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளுக்கான தயாரிப்பு அல்ல என்று நம்ப முடிகிறது. அவர்கள் இரு மனதாக இருந்து, அவரை அவசரப்படுத்தினால், அது மீண்டும் ஒரு விவேகமற்ற முடிவாக மாறிவிடும்.
வீரர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், நீண்ட காயத்திலிருந்து திரும்பும் வீரர்கள், உடற்தகுதியை நிரூபிக்க உள்நாட்டுப் போட்டியில் விளையாடுவது வழக்கமாகக் கூறப்பட்டாலும், பும்ராவின் விஷயத்தில் அது அவசியமாகக் கருதப்படவில்லை. ரஞ்சி டிராபி நடந்து கொண்டிருந்தாலும், அவரை விளையாட வைப்பதில் தயக்கம் காட்டுவது அணி நிர்வாகமும், பிசிசிஐயும் பும்ராவுடன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தற்செயலாக, அவர் கடைசியாக குறைந்த முதுகு அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் திரும்பியபோது, அவர் ரஞ்சி ஆட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும், ஆனால், அவரை விளையாட வைக்கவில்லை.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதுகில் உள்ள அழுத்த எதிர்வினைகள் நீண்ட கால பிரச்சனைகளை ஏற்படுத்தும். போதுமான ஓய்வு மற்றும் மறுவாழ்வு கட்டாயமாக இருந்தபோதிலும், டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய டி20 போட்டிகளில் அவரை விளையாட வைத்தது இந்தியாவின் விரக்தியான முடிவு. மேலும் பும்ரா இரண்டு போட்டிகளிலும் விளையாடி இருந்தார்.

பும்ரா மிகவும் சிறப்பு வாய்ந்தவர். ஒரு கட்டத்தில் அவர் வந்ததால், இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வரிசைக்கு அசுர பலம் கிடைத்தது. பேட்டிங் ஆடும் தங்களின் நட்சத்திர வீரர்களுக்காக போட்டிகளை பார்த்த ரசிகர்கள், பும்ராவின் பந்துவீச்சு தாக்குதலை காணவும் குவித்தனர். இதேபோல், பும்ராவால் எதிரணிக்கு உளவியல் பயத்தையும் உருவாக்க முடியும்.
கடைசி டி20 உலகக் கோப்பையில், இந்தியாவின் பேட்டிங் அவர்களின் பலவீனமான இணைப்பாக இருந்தாலும், பும்ரா இல்லாத வெற்றிடம் மிகவும் நன்றாகவே தெரிந்தது. புவனேஷ்வர் குமார், ஷமி மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் டெத் ஓவர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்தியா பந்து வீச்சில் பதில்கள் குறைவாகவே இருந்தது. ஒருநாள் கோப்பையில் அதை மீண்டும் செய்தால், பட்டத்தை வெல்வதற்கான கனவு மீண்டும் ஒருமுறை கானல் நீராகி விடும்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சனும் பும்ரா தான் விளையாடும் ஃபார்மெட்டை தேர்வு செய்ய வேண்டும் என்று நம்புகிறார். “ஒரு வீரரின் வாழ்க்கையில், ஒரு தசாப்தத்தில் மட்டுமே நீங்கள் உச்சத்தில் பந்து வீச முடியும். எனவே உணர்ச்சியை விட, இது உங்களுக்கு என்ன வேலை செய்கிறது என்பதைப் பற்றியது. உங்கள் வாழ்க்கையை சிறப்பாகச் செயல்பட வைப்பது மற்றும் உங்கள் நாட்டிற்கு நீண்ட காலத்திற்கு சேவை செய்வதற்கு எது உதவுகிறது என்பதை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அவர் பந்துவீசுவதைப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் மற்றும் அவர் இந்தியாவை உலகக் கோப்பைகளை வெல்ல உதவ முடியும் என்றால், அவர் ஏன் மற்ற வடிவங்களுக்கு வெள்ளை பந்தைக் கைவிட வேண்டும்? அவர் எத்தனை முறை காயமடைகிறார் என்பதாலேயே அவரால் அனைத்து ஃபார்மேட்களிலும் விளையாட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.என்று தாம்சன் கூறியுள்ளார்.
பும்ராவும் இந்தியாவும் குறைந்த பட்சம் இந்த உலகக் கோப்பை ஆண்டாவது, அவருக்கு முக்கியமாக ஒருநாள் போட்டியாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறார்களா? மேலும் ஐபிஎல்லில் அவரை எப்படி கண்காணிக்கப் போகிறார்கள்? அவரை டெஸ்டில் விளையாடும் ஆசையை அவர்கள் எதிர்ப்பார்களா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் பும்ராவின் உடனடி மற்றும் நீண்ட கால எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.