New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/tamil-indian-express-22.jpg)
Suryakumar Yadav, the world number one T20 batter, lauded the young Dewald Brevis for his knock of 162 off 57 balls during an CSA T20 Challenge game tamil news
சூர்யகுமார் யாதவ், 'நானே உங்களைத்தான் காபி அடிக்க முயற்சி பண்றேன்' என்று கூறி தென் ஆப்ரிக்க இளம் வீரரான டெவால்ட் ப்ரீவிஸை கவுரவப்படுத்தியுள்ளார்.
Suryakumar Yadav, the world number one T20 batter, lauded the young Dewald Brevis for his knock of 162 off 57 balls during an CSA T20 Challenge game tamil news
News about Dewald Brevis, Suryakumar Yadav tamil news: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் சூர்யகுமார் 45 பந்துகளில் சதம் விளாசினார். மேலும் அவர் 51 பந்துகளில் 9 சிக்ஸர் 7 பவுண்டரிகளை விளாசி 112 ரன்கள் குவித்தார். அதனால், ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இளம் வீரரை கவுரவப்படுத்திய சூர்யகுமார்
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ், 'நானே உங்களைத்தான் காபி அடிக்க முயற்சி பண்றேன்' என்று தென் ஆப்ரிக்க இளம் வீரரான டெவால்ட் ப்ரீவிஸை கவுரவப்படுத்தியுள்ளார்.
மேலும், சூர்யகுமார் வரவிருக்கும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொள்ளும்போது டெவால்ட் ப்ரீவிஸிடம் இருந்து "நோ-லுக்" ஷாட்களைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் டிவி வெளியிட்ட ஒரு வீடியோவில் சூர்யகுமார் மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் கலந்துரையாடினர். அப்போது பேசிய சூர்யகுமார்,"நான் சில சமயங்களில் உங்களைத் (ப்ரீவிஸ்) தான் காப்பி அடிக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பேட்டிங் செய்யும் விதம் அவ்வளவு சிறப்பாக உள்ளது. அந்த நோ-லுக் ஷாட், நோ-லுக் சிக்ஸ் எப்படி? அடிப்பது என்பதை நீங்கள் எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்." என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த ப்ரீவிஸ், "நான் அதை ஒரு கவுரவமாக நினைக்கிறேன். ஆனாலும், நான் உங்களிடமிருந்தும் நிறைய ஷாட்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நோ - லுக் ஷாட் நடக்கிறது, இது விசித்திரமானது, ஆனால் அது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சூரியகுமார், "கடந்த முறை நீங்கள் டி20 ஆட்டத்தில் 50-55 பந்துகளில் 160-165 ரன்கள் எடுத்ததை நான் பார்த்தேன். எனவே இப்போது ஒருநாள் போட்டிகளில், நீங்கள் 100 பந்துகளில் பேட் செய்தால், நீங்கள் டிரிபிள் சதம் அடிக்கப் போகிறீர்கள்," என்றார்.
அதற்கு ப்ரீவிஸ், "எனக்கு இது மற்றொரு சாதாரண நாள் போல் இருந்தது. அது (அந்த நாக்) இப்போது நடந்தது. அந்த நேரத்தில் நான் என்ன செய்கிறேன் என்று கூட எனக்கு புரியவில்லை, எல்லாம் இந்த நேரத்தில் நடந்தது, ஒரு கட்டத்தில் நான் சொன்னேன். நான் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடிக்க முயற்சிப்பேன் என்று நான் நினைத்தேன்.
இது ஒரு சிறப்பு இன்னிங்ஸ் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சாதித்தது நம்பமுடியாதது என்று நான் சொல்ல வேண்டும், நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்." என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.