11 வினாடிகளில் 5 விக்கெட்டுகள்: அர்ஷ்தீப், சாகர் கெத்து காட்டிய வீடியோ
Ind vs SA 1st T20I; match highlights and viral video Tamil News: தென் ஆபிரிக்க அணியின் முதல் 5 விக்கெட்டுகள் மளமளவென சாய்க்கப்பட்ட 11 வினாடி வீடியோ ரசிர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகிறது.
Deepak Chahar and Arshdeep Singh dismantled South Africa top order
India vs South Africa, 1st T20I Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.
Advertisment
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விரட்டிய கேசவ் மகாராஜ் 41 ரன்கள் எடுத்தார். ஐடன் மார்க்ரம் 25 ரன்களும், பார்னெல் 24 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களையும், தீபக் சஹார் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியில் சிறப்பான ஜோடி அமைத்த ராகுல்- சூர்யகுமார் 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை வெற்றிகரமாக கடந்தனர். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் சூர்ய குமார் யாதவ் அரைசதம் அடித்தார். இறுதியில் சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தாக ராகுல், தனது அரைசதத்துடன் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதனால் இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் 50 ரன்கள் (33 பந்துகள்), ராகுல் 51 ரன்கள் (56 பந்துகள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தெ.ஆ விக்கெட்டுகளை மளமளவென சாய்த்த இந்திய வீரர்கள்
இந்த ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டி காக்-கேப்டன் பவுமா களமிறங்கினர். அப்போது இந்திய அணி சார்பில் முதல் ஓவரை தீபக் சஹார் வீசினார். அவர் வீசிய கடைசி பந்தில் கேப்டன் பவுமா டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு 2-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார். அவரின் ஓவரில் டி காக் (1 ரன்,) ரிலீ ரோஸோ (டக் அவுட்), மில்லர் (டக் அவுட்) ஆகியோரை என 3 முன்னணி வீரர்களை தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பெவிலியனுக்கு நடையைக் கட்ட செய்திருந்தார்.
தொடர்ந்து 3வது ஓவரை வீசிய தீபக் சஹார் அவரின் 3வது பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸை ஆட்டமிழக்க செய்தார். ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்கமால் நடையைக் கட்டி இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்த திண்டாட்டத்திற்கு இந்திய அணியின் அர்ஷ்தீப் மற்றும் தீபக் சஹார் ஆகிய இரு பந்துவீச்சாளர்கள் தான் என்றால் நிச்சயம் மிகையாது.
இந்நிலையில், இந்த இரண்டு வீரர்களும் சரமாரியாக சாய்த்த 5 விக்கெட்டுகளின் ஆட்டமிழப்பு வீடியோ பிசிசிஐ அதன் அதிர்ப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 11 வினாடிகள் ஒளிபரப்பாகும் இந்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரட்டப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.