Advertisment

'அவரை காயப்படுத்தி இருக்கலாம்': தோனி - ஜடேஜா பிளவு குறித்து சி.எஸ்.கே சி.இ.ஓ ஓபன் டாக்

சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் தோனி - ஜடேஜா இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட 'பிளவு' குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK CEO Kasi Viswanathan on Dhoni - jadeja rift during IPL 2023

'ஜடேஜா எப்போதும் தோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இறுதிப் போட்டிக்குப் பிறகும், ‘இந்த ஆட்டத்தை தோனிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.’ என்றார்' என சி.எஸ்.கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

Chennai Super Kings CEO Kasi Viswanathan on  MS Dhoni  Ravindra Jadeja Tamil News: இந்திய மண்ணில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஐ.பி.எல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. ஆனால், இந்த சீசனின் போது, ​​ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் கேப்டன் எம்எஸ் தோனிக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. அப்போது, ரசிகர்கள் தான் ஆட்டமிழக்க வேண்டும் என காத்திருக்கிறார்கள் என்று ஒரு போட்டிக்குப் பிறகு ஜடேஜா கூறியிருந்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மறைமுக ட்வீட்டையும் பதிவிட்டார். அதில், "கர்மா உங்களிடம் மீண்டும் வரும். விரைவிலலே அல்லது பின்னரோ அது நிச்சயமாக நடக்கும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

Advertisment

இந்நிலையில், சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி - ஜடேஜா இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட 'பிளவு' குறித்து தெளிவுபடுத்தினார். மேலும், தோனி ஜடேஜாவை அடுத்து பேட்டிங் செய்ய வருவதால், அவர் விரைவில் ஆட்டமிழக்க வேண்டும் என்கிற ரசிகர்களின் ஆரவாரத்தால் ஜடேஜா காயப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

publive-image

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்): சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன்

இது தொடர்பாக காசி விஸ்வநாதன் இ.எஸ்.பி.என் கிரிக்இன்போ (ESPN Cricinfo) உடனான உரையாடலில் பேசுகையில், “ஜடேஜாவை பொறுத்த வரையில் அவர் சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங் செய்யும்போது, ​​ருதுராஜ், கான்வே, மொயீன், ரஹானே போன்ற எங்கள் வரிசை முடிவுகளுடன், அவர் <ஜடேஜா> பேட்டிங் செய்யும்போது, ​​அவருக்கு 5-10 பந்துகள் மீதம் இருந்தன. இதுபோன்ற சூழ்நிலைகளில், அது சில நேரங்களில் கிளிக் செய்யலாம் அல்லது முடியாது.

ஆனால் விஷயம் என்னவென்றால், தோனி அடுத்ததாக வருவார் என்பது அவருக்கும் தெரியும். மேலும் அவர் சில நேரங்களில் 2-3 பந்துகளை மட்டும் ஆடுவார். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர் உள்ளே செல்லும் போதெல்லாம், ரசிகர்கள் தோனியை வரவேற்றனர். இது ஒரு விதத்தில், அவரை காயப்படுத்தி இருக்கலாம். அந்த விஷயத்தில் எந்த வீரருக்கும் அந்த அழுத்தம் இருந்திருக்கும். ஆனால் அவர் ட்வீட் போட்டாலும் அதைப் பற்றி புகார் செய்யவில்லை.

இது அனைத்தும் விளையாட்டின் ஒரு பகுதியாகும். கடைசி ஆட்டத்திற்குப் பிறகு, ரசிகர்கள் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்தார்கள். அந்த வீடியோவில் நான் ஜடேஜாவை சமாதானப்படுத்துகிறேன் என்று கருதினர். ஆனால் அது அப்படி இல்லை. நான் அவருடன் போட்டியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன், அவர் என்ன செய்தார். எங்களுக்குள் வேறு எந்த விவாதமும் இல்லை. ஒரு அணி சூழலில் அனைவருக்கும் தெரியும், டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது, வெளியே யாருக்கும் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. அவர் எப்போதும் தோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இறுதிப் போட்டிக்குப் பிறகும், ‘இந்த ஆட்டத்தை தோனிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.’ என்றார். அதுதான் எம்எஸ் மீது அவருக்கு இருக்கும் மரியாதை,” என்று அவர் கூறியுள்ளார்.

குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு வெற்றி ரன்களை குவித்த ஜடேஜா, சாம்பியன் பட்டத்தை தோனிக்கு அர்ப்பணித்தார். "இந்த வெற்றியை சிஎஸ்கே அணியின் சிறப்பு வீரரான எம்.எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். எனது 5வது பட்டத்தை எனது சொந்த ஊர் ரசிகர்கள் முன் வென்றது ஆச்சரியமாக இருக்கிறது. நான் குஜராத்தைச் சேர்ந்தவன், அது ஒரு சிறப்பு உணர்வு. நள்ளிரவு வரை மழை நிற்கும் என்று காத்திருந்தனர், எங்களுக்கு ஆதரவாக வந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் போட்டிக்குப் பிறகு கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Ms Dhoni Chennai Super Kings Ipl News Ipl Cricket Ipl Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment