/indian-express-tamil/media/media_files/c2Yvc9xB9dEn6fUM1S1e.jpg)
ஐ.பி.எல். போட்டிகளில் டாஸில் ஜெயிக்க பயிற்சி எடுத்து வருவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
Ruturaj Gaikwad | MS Dhoni | IPL 2024 | Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே)- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி, 4ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் சென்னை அணி, இந்தப் போட்டியை வென்று பிளே-ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்த முயலும். அதற்கு முட்டுக்கட்டை போடவே 6 புள்ளியுடன் 8வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை ஒட்டி சென்னை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், டாஸில் ஜெயிக்க பயிற்சி எடுத்து வருவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
"டாஸை உன்னால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நீ அதை வென்றாக வேண்டும். எனவே, அதற்காக பயிற்சி எடு என தோனி பாய் கூறினார். அன்றிலிருந்து டாஸ் போடுவதை டக்-அவுட்டில் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வருகிறேன்" என்று புன்னகையை தவழ விட்டவாறு கூறியிருக்கிறார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 9 போட்டிகளில் வழிநடத்தியிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அதில் 8 முறை டாஸில் தோற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் மட்டும் தான் அவர் டாஸ் வென்றார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.