New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/30/azgZfgoSFy4j7c9Iz2h6.jpg)
ஐ.பி.எல். 2025:சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல், 49-வது லீக் போட்டி, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை.
ஐ.பி.எல். 2025 தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 49-வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது
ஐ.பி.எல். 2025:சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல், 49-வது லீக் போட்டி, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 49-வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது
ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs PBKS LIVE Cricket Score, IPL 2025
டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் - சென்னை முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, சென்னை அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய ஷேக் ரஷீத் - ஆயுஷ் மத்ரே ஜோடியில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட ஷேக் ரஷீத் 11 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்த ஆயுஷ் மத்ரே 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன்பிறகு வந்த ஜடேஜா ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய நிலையில், 17 ரன்னில் அவுட் ஆனார்.
களத்தில் ஆடி வந்த சாம் கரன் - டெவால்ட் ப்ரீவிஸ் ஜோடி அணியின் விக்கெட் சரிவை சிறிது நேரம் தடுத்து நிறுத்தினர். இதில் ப்ரீவிஸ் 32 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். இதனிடையே, களத்தில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சாம் அரைசதம் விளாசி மிரட்டினார். அவர் 47 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அவரது விக்கெட்டுக்குப் பின் களம் புகுந்த கேப்டன் தோனி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டி 11 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், 19.2 ஓவர்களில் சென்னை அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 190 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, பிரப் சிம்ரன், பிரியன்ஷா ஆர்யா சிறப்பான தொடக்கம் கொடுத்தனது. இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆடி ரன்கள் சேர்த்த நிலையில், பிரியன்ஷா ஆர்யா 15 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பிரப் சிம்ரனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர்கள் இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் கடந்த பிரப் சிம்ரன், 36 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன்’, 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வதேரோ 5 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஷஷாங் சிங் 12 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தாலும், சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்ரோயாஸ் அய்யர் அரைசதம் கடந்து அசத்தினார்.
பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில், 19-வது ஓவரின் 4-வது பந்தில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். 41 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரி 4 சிக்சருடன், 72 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனாலும் 19.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சென்னை அணி தரப்பில், கலீல் அகமது, பதிரானா ஆகியோர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 10 ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி 8-வது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்எஸ் தோனி(கேப்டன்/விக்கெட் கீப்பர்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா.
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் இதுவரை ஆடியுள்ள 9 ஆட்டங்களில் 2 மட்டும் வெற்றி, 7 போட்டிகளில் தோல்வி என பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், அந்த அணியின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். போட்டியை நேரில் பார்க்க முன்பு போல யாரிடமும் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை என்றும், டிக்கெட்டுகள் ஒரு நேரத்தில் கள்ள சந்தையில் விற்கப்பட்ட சூழலில், தற்போது அதன் உண்மையான விலைக்குக் கூட வாங்க ஆள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும் சென்னை அணி, ஆறுதல் வெற்றிக்காக போராடுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால், சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்.லில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆனது. இவ்விரு அணிகள் கடைசியா கடந்த 8 ஆம் தேதி மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.